க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

உன்னிடம் தந்துவிட எதுவுமே என்னிடமில்லை...
என் உயிரைத் தவிர...
ஆனாலும் என் மனம் துடிக்கிறது…
இதயம் கூட சொல்கிறது…

நட்பிற்கு இலக்கணம் ஏதும் இல்லை,
அன்பு செலுத்துவதை தவிர…
என்னிடம் இருக்கும் அன்பையெல்லாம்
கைமாற்றாய் தருகிறேன், திருப்பி தருவாய் என…

நீ கூட கொமர்ஷல் வங்கி தான்
நான் தருவதையெல்லாம் வட்டியோடு தருகிறாய்…
கேட்காத போதெல்லாம் வட்டியை உயர்த்தி
இருமடங்காய் அன்பை தருகிறாய்…

நீ கூட பயங்கரவாதி தான்…
உன் அன்பு எனும் ஆட்லறியால் என்
இதயம் எனும் “பங்கர்”ஐ கைப்பற்றி
சர்வாதிகாரம் புரிகிறாய்…

கவிதைக்கு இலக்கணம் கம்பராய் இருக்கலாம்
நட்புக்கு நீதானே இலக்கணம்…
பழகப் பழக பால் வேண்டுமானால் புளிக்கலாம்
நட்பு இனிக்கிறது, தெவிட்டுகிறது…

மேலும் மேலும் சொல்ல அன்பு இருக்கிறது
ஆனால் வார்த்தை இல்லை
உன் அன்பிலே ஊறி நனைந்து விட்டேன்
தொடர்ந்து நனைகிறேன்…

0 பின்னூட்டங்கள்: