க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மனம் வருந்துதடி…
என் மனம் வருந்துதடி…
புனிதமான நட்பை கூட கள்ளத்தனமாய்
களவாக செய்கிறோம்…

நான் ஆண், நீ பெண் என்பது
சமூகத்திற்கடி, நட்புக்கு அல்ல…
ஆனாலும் தறிகெட்ட சமூகத்திற்கு
அஞ்சுகிறோம், மறைக்கின்றோம் எமது நட்பை…

என் வாழ்நாள் முழுதும் உனக்கென தந்தேன்
உன் வாழ்நாளை எடுத்துக் கொண்டு…
காதலை மதிக்கும் இந்த சமூகம்
நட்பை மட்டும் மிதிப்பதென்னடி…?

இதற்கெல்லாம் அஞ்ச நானொன்றும்
மூடன் இல்லையடி…
என் இதயத்தில் வீரப்பெண்
உன்னையமல்லவா தாங்குகிறேன்…

0 பின்னூட்டங்கள்: