க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஆதர் ஆஷி என்ற புகழ்பெற்ற விம்பிள்டன் வீரர் 1983 இல் அவருக்கு நடந்த இருதய சத்திரசிகிச்சை ஒன்றின் போது வழங்கப்பட்ட பாதிக்ப்பட்ட இரத்தம் ஒன்றினால் எயிட்ஸ் நோய் ஏற்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தார்.

உலகெங்கிலும் இருந்து அவரது இரசிகர்களிடமிருந்து அவருக்கு கடிதங்கள் கிடைத்த வண்ணமே இருந்தது. அதில் ஒரு கடிதத்தில் ஒரு இரசிகர் கூறியிருந்தார், 'கடவுள் ஏன் உங்களை இத்தகைய ஒரு கொடுமையான நோய்க்கு உங்களைத் தெரிவு செய்தார்?'

அதற்கு ஆதர் ஆஷி இப்படிப் பதிலளித்தார்,
'உலகெங்கிலும் இருந்து 50 மில்லியன் சிறுவர்கள் ரெனிஸ் விளையாட ஆரம்பிக்கின்றனர், அதில் 5 மில்லியன் பேர் ரெனிஸ் விளையாட கற்றுக் கொள்கின்றனர்,
500,000 பேர் ரெனிஸை வாழக்கைத் தொழிலாக கொள்கின்றனர்,
அதில் 50,000 பேர் சர்வதேச எல்லைக்குள் வருகின்றனர், 5000 பேர் கிரான்ட்ஸ்லாமை வந்தடைகின்றனர்,
50 பேர் விம்பிள்டனில் விளையாட தகுதி பெறுகின்றனர், 4 பேர் அரையிறுதிப் போட்டியை அடைகின்றனர்,
2 பேர் இறுதிப் போட்டியை அடைகின்றனர்,
இறுதியாக விம்பிள்டன் கோப்பையை நான் பெற்ற போது நான் கடவுளிடம் நான் கேட்கவி்ல்லை 'ஏன் நான் மட்டும்' என்று,
ஆனால் இன்று நான் வருத்தத்தில் இருக்கும் போது மட்டும் 'ஏன் நான்?' என்று கேட்பது மட்டும் எவ்வாறு நியாயமாகும்?' என்று பதிலனுப்பினார்.

"சந்தோஷம் உங்களை இனிமையாவர்களாக மாற்றுகின்றது,

முயற்சிகள் உங்களை வலிமையாக்குகின்றது,

கவலைகள் உங்களை மனிதனாக இருக்க வைக்கின்றது,

தோல்விகள் உங்களை பணிவுள்ளவர்களாக்குகின்றன,

வெற்றிகள் உங்களை மின்னச் செய்யச் செய்கின்றன,
ஆனால் நேர்மையும் சிறந்த மனப்பான்மையும் மட்டுமே உங்களை தொடர்ந்து மேற்செல்ல உதவுகின்றன...'

**************************************************************
இந்த தகவலை நான் எடுத்தது எனது சகோதரி ஒருவரின் வலைப்பூவிலிருந்து... இதை அவரின் வலைப்பூவில் ஆங்கிலத்தில் படிக்கலாம்... இதை அவரின் வலைப்பூவில் படிக்க cuteanju.blogspot.com என்ற முகவரிக்கு செல்லவும்.

1 பின்னூட்டங்கள்:

நல்ல பதிவு கோபி.