க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நிறைய நாட்களாக தனிப்பட்ட விடயங்கள் காரணமாக எதுவும் எழுதவில்லையே என்று நிறைய கவலையில் இருந்தேன். இன்று தான் நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு இடுகையாவது இடுகிறேன்…
நண்பனொருவன் உதவியொன்று கேட்டதற்காக இணைய உலாவும் இடத்திற்குச் சென்றேன்.
அங்கே அந்த நண்பனுக்கு தெரிந்த ஒருவர் வந்து இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தார். அன்று தான் அஜித் என்ற நடிகரின் புதிய திரைப்படம் வெளியாகி இருந்தது. காலை 10 மணிக்குக் காட்டப்படும் காட்சிக்காக காலை 6 மணியிலிருந்து வரிசையில் நின்று 10 மணிக்குப் படம் பார்த்து விட்டு உடனே அந்த இணைய உலாவும் இடத்திற்கு வந்து 2 மணித்தியாலங்களாக அந்தத் திரைப்படப் பாடல்களை பார்த்துக் கொண்டு இருந்தார். படத்தை அந்தளவு நேரம் காவலிருந்து பார்த்து விட்டு அதே பாடல்களை 2 மணித்தியாலங்களாக பார்க்கத்தான் வேண்டுமா?
எதிர்கால சந்ததி இப்படித் தான் இருக்க வேண்டுமா?
அஜித் குமாரின் படம் மாத்திரமல்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் முதல் யாரினுடைய படமாக இருந்தாலும் நான் இதே கருத்தைத் தான் சொல்லியிருப்பேன்…
இரசிப்பது தவறல்ல… அடிமையாவது தான் தவறு…