க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஜனாதிபதி-
ராஜாவுக்கு ராஜா நான்டா... எனக்கு நூற்றிப்பத்து மந்திரிங்க...

மேர்வின் சில்வா-
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்... உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்து கொள்ளுங்கள்...

கோத்தபாய-
தமிழன் நினைப்பதுண்டு...கொழும்பு நல்லம் எண்டு...  நாங்கள் நினைப்பதுண்டு...கேனைத் தமிழனெண்டு...

மக்கள்-
(இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா...)

வயிற்றில் பசி உள்ள போது ரீ.வி பார்க்க முடியுமா... பணமிருந்தும் பணத்தை அள்ளி உண்ண முடியுமா...(2)
காசு உள்ள நேரம் கடயில் சாமான் இருக்குமா... சாமான் கடயில் இருந்த நேரம் வாங்க முடியுமா...(2)
பணத்தை பாங்கில் போட்;டு விட்டால் வட்டி கிடைக்குமா... காசை வீட்ட பூட்டி வச்சா நாளைக்கு இருக்குமா... நாளைக்கு இருக்குமா...
வயிற்றில் பசி உள்ள போது ரீ.வி பார்க்க முடியுமா... பணமிருந்தும் பணத்தை அள்ளி உண்ண முடியுமா...

வோட்டை போட்ட நாங்கள் யோசிச்சு போட்டோமா... வோட்டை போட்ட பின்னும் நாங்கள் உணர்ந்து கொண்டோமா...
உணர்ந்த பின்னும் நாங்கள் இங்கு என்ன செய்தோமே... எம்மை புரிந்து அவர்கள் எம்மில் ஏறி கபடி ஆடினரே... கபடி ஆடினரே...
வயிற்றில் பசி உள்ள போது ரீ.வி பார்க்க முடியுமா... பணமிருந்தும் பணத்தை அள்ளி உண்ண முடியுமா...

0 பின்னூட்டங்கள்: