க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் காலத்திற்கு முன்னர் சினிமாவில் கதாநாயகன் காதலியை கட்டியணைக்கும் போது அந்தப் பெண் தனது கைகள் இரண்டையும் முன்னே மடித்து கேடயமாக்கி தன் மார்புகளை ஒரு கேடயம் போல் காப்பாற்றி விடுவாராம். பத்மினி அவர்கள் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் நடித்தபோது இந்தப் பழக்கத்தை உடைத்தெறிந்தாராம்...
(இன்றைய நடிகைகள் இப்படி தறிகெட்டுப் போய் இருப்பதற்குரிய ஆரம்பத்தை, அஸ்திவாரத்தை இட்ட பெருமை நடிகை பத்மினியை தான் சேரும் போல...)

நடிகை பத்மினி அவர்கள் ஒருமுறை கனடா சென்றிருந்தாராம் (நடிப்பை கைவிட்ட பிறகு தான்...)... அப்போது அவரிடம் பலர் கேட்ட கேள்வி '60 திரைப்படங்களில் சிவாஜி கணேசன் அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறீர்களே, ஏன் அவரை திருமணம் செய்யவில்லை?' என்பது தானாம்... அவர்கள் கேட்டபொழுது எந்தவித முகபாவங்களையும் காட்டவில்லை... கடைசியாக கனடாவை விட்டு செல்லும் நேரத்தில் தான் அந்த வினாவிற்கு விடையளித்தாராம்...
அது இது தான்...
'நான் நாயர் பொண்ணு... அவர் கன்னர் ஜாதி... நடக்கிற காரியமா?'
(பாருங்கள்... உலகப் புகழ் பெற்றவர்கள் கூட இந்த ஜாதி விடயத்தை எவ்வளவு பெரிதாக பார்க்கிறார்கள்... என்ன கொடுமை ஷரவணா இது...)

0 பின்னூட்டங்கள்: