க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

இலங்கையில் லங்காபெல் என்றொரு CDMA வகை இணைப்புக்களைத் தரும் தொலைபேசி வழங்குனர் இருக்கின்றது. முற்றுமுழுதாக இலங்கைக்கு சொந்தமான தொலைபேசி என சொல்லப்படுவதுண்டு. ஒப்பீட்டளவில் மற்றைய CDMA , கைப்பேசி இணைப்புக்களை விட இலாபகரமானது என கருதப்படும் இத் தொலைபேசி நிறுவனத்தினர் இப்போது வெளிநாட்டிலிருந்து எங்களுக்கு வருகின்ற உள்வரும் அழைப்புகளுக்கு எங்களுக்கு பணம் தருகின்றனர். ஒரு நிமிட வெளிநாட்டு உள்வரும் அழைப்பு பெறப்படின் எமக்கு 50 சதம் எங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
உதாரணமாக எங்களுக்கு 30 நிமிட உள்வரும் அழைப்பு பெறப்படின் எமது கணக்கில் ரூபா 15 வரவு வைக்கப்படும்.
எவ்வளவு பணம் என்பது இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டால் உள்வரும் அழைப்புகளுக்கு எங்களிடம் பணம் பெறும் நிலையில் எங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு எங்களுக்கு பணம் தருதல் என்பது அதிசயமன ஒன்று தானே…
(அவர்களது நோக்கம் எதுவாக இருப்பினும் அதை விட்டுவிட்டால் எங்களுக்கு நன்மை என்பது சிறப்பானது
 தானே…)

0 பின்னூட்டங்கள்: