க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றப் போட்டிகளில் ஒரு பந்துப் பரிமாற்றத்தில் தோளுக்கு மேலால் செல்லும் பந்து ஒரு பந்தும், ரெஸ்ற் போட்டிகளில் ஒரு பந்துப் பரிமாற்றத்தில் தோளுக்கு மேலால் செல்லும் பந்துவீச்சுகள் ஆகக்கூடுதலாக இரண்டு முறையும் வீசப்படலாம் என்ற விதி ஏற்படுத்தப்பட காரணம்...
1932-1933 காலப்பகுதியில் இங்கிலாந்துக்கான அவுஸ்ரேலிய சுற்றுலாவில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் தோளுக்கு மேலால் செல்லும் பந்துகளை வீரரை தாக்கும் விதமாக வீசியதோடு ஏராளமான வீரர்களை துடுப்பாட்ட வீரரை சுற்றி நிற்க வைத்தார்கள். எனவே துடுப்பாட்ட வீரர் தன்னை பாதுகாக்க வேண்டி மறித்து ஆட முற்பட தன்னைச் சுற்றி நின்ற வீரர்களிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள். சிலர் இலக்குக் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இதன் போது கிலர் காயமடைந்ததாகவும், சிலர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் பிறகே ஆபத்தான பந்து வீச்சு பற்றிய விதி உருவாக்கப்பட்டதோடு இலக்குக்கு இடது புறத்தில் இலக்குக்கு மூலைப்பகுதியில்(Squre of the wicket) 2 களத்தடுப்பாளர்கள் மட்டுமே களத்தடுப்பில் ஈடுபடலாம் என்ற விதியும் உருவானது.

0 பின்னூட்டங்கள்: