க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஒழுங்கான சிறுதுயில்கள் வயதடைதலை தடுக்கின்றன. முக்கியமாக நீங்கள் வாகனத்தைச் செலுத்துகையில் எடுப்பது.

ஒரு பிள்ளை உங்களுக்கு இருப்பின் நீங்கள் பெற்றோராவீர்கள். இரண்டு பிள்ளைகள் எனின் இருவருக்குமிடையில் நடுவராவீர்கள்.

திருமணம் என்பது ஒரு உறவு. அதில் ஒருவர் எப்போதுமே சரியாக இருப்பார். மற்றவர் கணவனாக இருப்பார்.

நாம் அனைவரும் வரிகளை புன்னகை கொண்டு செலுத்த வேண்டுமென நினைக்கிறேன். நான் முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் பணம் கேட்கிறார்கள்.

ஒரு குழந்தையின் அதிகப்படியான வளர்ச்சி ஏற்படும் காலமானது, பாடசாலைக்கு செல்ல நீங்கள் புதிய சீருடைகளை வாங்கிய பின் ஒரு மாதத்திற்குள் ஏற்படும்.

நீங்கள் யாருடன் வாழ விரும்புகிறீர்களோ அவரை மணப்பதை விட, யாரில்லாமல் உங்களால் வாழ முடியாதோ அவரையே மணவுங்கள். ஆனால் எதைச் செய்யினும் பிற்காலத்தில் வருத்தப்படத் தான் போகிறீர்கள்.

காதலை உங்களால் பணத்தைக் கொடுத்து வாங்க முடியாது. ஆனால் காதலிக்க தொடங்கிய பின் அதற்காக செலுத்துவீர்கள்.

வாக்களிக்காது விடுகின்ற நல்ல பிரஜைகளால் தான் பிழையானவர்கள் தேர்வாகிறார்கள்.

சோம்பல் என்பது வேறொன்றுமில்லை. களைப்படைய முன்னரே நாம் எடுக்கும் ஓய்வு தான் சோம்பல்.

திருமணம் என்பது கொடுப்பதும் பெறுவதும் தான். நீங்களாக கொடுப்பது சிறந்தது, அல்லது உங்கள் மனைவி எப்படியோ எடுத்துக் கொள்வாள்.

மனைவியும் கணவனும் எப்போதுமே சமரசம் செய்து கொள்வார்கள். கணவன் பிழை செய்வதாக ஒத்துக் கொள்வான். மனைவி அதை ஏற்றுக் கொள்வாள்.

பெண்களுக்கு முதலிடம். அழகான பெண்களுக்கு அதனிலும் முன்னுரிமை.

ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு அதிக முறை காதலில் விழுவது அவசியமானது, ஆனால் அதே நபருடன்.

உண்மையான நண்பர்கள் என்பவர்கள் கைத்தொலைபேசி மாறும் போது தப்பிப் பிழைத்து நம் கைத்தொலைபேசியில் இலக்கங்கள் இருப்பவர்கள் தான்.

சேமிப்பு என்பது மிகச்சிறந்தது. குறிப்பாக உங்கள் தந்தை உங்களுக்கு சேமித்திருப்பின்.

நம் மொழியை தாய் மொழி என்று அழைக்கிறோம், ஏனென்றால் தந்தைமார் கதைப்பது குறைவு.

0 பின்னூட்டங்கள்: