க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நம் காதலை மறக்க நினைக்கிறேன்,
உன் பூ முகம் கண்முன்னே வருகிறது...
உன் பூ முகம் மறக்க நினக்கிறேன்,
நம் காதல் கண் முன்னே வருகிறது...
இரண்டையும் மறக்க நினைக்கிறேன்,
மரணம் கண் முன்னே வருகிறது...
 

 *****************************************************

எதிர்காலத்தை அறிய சோதிடனிடம் சென்றேன் அவளோடு,
24 வயதில் உனக்கு காதல் மணம் என்றால் அவளிடம்...
படுபாவி! யாருடன் என்பதை சொல்ல மறந்து விட்டான்...

*****************************************************

இலங்கைத் தேயிலை இட்ட
தேநீரை உறிஞ்சிக் குடிக்கையில்
நினைவில் கொள்ளுங்கள்...
நீங்கள் உறிஞ்சிக் குடிப்பது தேநீர் மட்டுமல்ல...
ஏழைகளின் இரத்தத்தையும் தான்...

0 பின்னூட்டங்கள்: