க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நான் யாருமில்லை. யாருமே முழுநிறைவில்லை. ஆகவே நான் முழு நிறைவானவன்.

பயிற்சிகள் ஒருவனை முழுநிறைவாக்குகிறது. ஆனால் யாருமே முழு நிறைவில்லை. ஆகவே ஏன் பயிற்சி?

நான் இப்போது நேரத்தை மிச்சம் பிடித்தால் எப்போது திரும்பப் பெறலாம்?

இதற்கு கீழேயுள்ள கூற்று உண்மையானது.
இதற்கு மேலேயுள்ள கூற்று பொய்யானது.

சில சமயங்களில் உங்களால் வழங்கக்கூடியவற்றையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன், உங்கள் வரவின்மையை.

மதுவை திடீரென கைவிடுவதால் ஏற்படும் விளைவுகளை தடுக்க ஒரே வழி தொடர்ந்து குடிப்பது தான்...

உனது தந்தை ஏழை என்றால் அது உன் விதி. உனது மாமனார் ஏழை என்றால் அது உன் முட்டாள்தனம்.

நான் பிறக்கும் போது அறிவாளி. கல்வி என்னை அழித்து விட்டது.

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்குத் தான் நாம் பிறந்திருக்கிறோம் என்றால் மற்றவர்கள் எதற்காக இங்கே இருக்கிறார்கள்?

பெரிய குழப்பங்களில் ஒன்று.
35ற்கு மேல் பெண்கள் பிள்ளை பெற வேண்டுமா?
இல்லை. 35 பிள்ளைகள் போதும்.

பூமியில் வாழ்வது செலவு கூடியதாக இருக்கலாம்.ஆனால் இது சூரியனைச் சுற்றி வருடாந்த இலவச சுற்றுலாவையும் கொண்டதல்லவா?

உன் எதிர்காலம் கனவுகளில் தங்கியிருக்கிறது. போ! போய் நித்திரை செய்.

புகைப்பிடித்தல் நம்மை மெதுவாகக் கொல்கிறதாம்.
அதனால் என்ன? யாருக்கு வேகமாக இறக்க அவசரம்?

சோம்பல் தான் நமது முதல் எதிரி- நேரு.
நாம் எதிரிகளை நேசிக்க வேண்டும்.- காந்தி.
நான் வேறென்ன சொல்ல முடியும்? சோம்பறியாக இருங்கள்.

ஒவ்வொரு நாய்க்கும் ஒவ்வொரு நாள் உண்டு.
உன்னுடைய நாளை நீ தவறவிட்டு விட்டாய்.

68.93 வீதமான தரவுகள் அர்த்தமற்றவை.

வரி கட்டுவதற்கும் கட்டாமல் இருப்பதற்குமான வித்தியாசம் 10 வருடங்கள் சிறை.

ஒரே ஒரு படிவத்தை நிரப்பி ஆண்டு முழுவதும் வரி கட்டுவதை வெல்லுங்கள்.

நான் ஏன் பழையவற்றைப் பற்றி நினைத்துக் கவலைப்பட வேண்டும், எனக்கு நினைத்துக் கவலைப்பட எதிர்காலம் இருக்கும் போது?

நான் பிழைகள் செய்ய விரும்புகிறேன், யாராவது அதன் மூலம் பாடம் படிக்க விரும்பும் போது.

2 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

கொஞ்சம் ஓவராத்தான் "லொஜிக்" படிக்கிறியள் போல!

மதன்

மொக்கைபோடும் கூட்டம் தமிழ்மணத்தில் அல்லவா இருந்தது.யாழ்தேவியிலுமா? தாங்காதுங்க :)