க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது 'இருக்கிற' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர் போலியான பதிவர்கள் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.


சந்திப்பில் ஒல்லாந்தர் காலத்தில் தங்கள் கடைசிப் பதிவை இட்டுவிட்டு இன்றும் தங்களை பதிவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அழைத்துக் கொள்ளும் யோ என்று கத்தும் பதிவரும், பிரபலமான தொடரூந்துச் சேவையொன்றை நடத்துபவர்களில் ஒருவரும், கிங்கொங் பதிவரும் முன்னாள் பதிவர்கள் என்ற வகையில் கலந்து கொண்டார்கள்....

இவர்களைத் தவிர எழுமாற்றாக அறுவடை செய்பவர்களை அறுவடை செய்யாமல் அடித்துத் துரத்திய படுபாவிப்பதிவரும்,  அடிக்கடி ருவிற்றரில் இருப்பவர்களை மொக்கையர்கள் என்று அழைத்துவிட்டு பேஸ்புக்கில் நண்ப'னு'டன் (அப்படித் தான் சொல்லிக் கொள்கிறார்கள்) அரட்டையடிக்கும் இளமைப்பதிவரும்,  பஞ்சாப்பில் பிரீட்டி ஜிந்தா என்ன செய்கிறார் என்றும் அவர் தனது விருப்புக்குரிய விசயமுள்ள நடிகரோடு சோடி சேர வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்யும் மதிப்புக்குரிய பதிவரும்,  பழைய காலப் பெட்டிகளில் பதிவிடும் மற்றும் தனது புதியவகைத் தலைமயிர் ஸ்ரைலை நல்லாயிருக்கு எண்டு மூடநம்பிக்கையில் திரியும் பதிவரும்,   இவரோடு கொள்கையில் (முக்கியமாக சினிமாவில்) நன்றாக ஒத்துப் போகும் வவுனியாவை விரும்பும் பதிவரும்,   படங்களுக்கு கொமன்ற் போட்டு ஆப்பு வைக்கும் மூன்று கோணத்திலுள்ள மலைப் பதிவரும்,  கிங்கொங் பதிவரால் மொக்கைக் கவிஞர் என பாராட்டப்பட்டதால் அடிக்கடி கவிதைகளை எழுதிவரும் வைத்தியப்பதிவரும்,   தமிழையும் விசயமானவரையும் விரும்பும் புயலை, காற்றை வெறுக்கும் பதிவரும் கலந்து கொண்டனர்.

சந்திப்பு நடைபெற்ற இடத்தில் எலிகள் காணப்படும் என்ற பயத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்த ஆ!ஸ்கீறீன் என்று கத்தும் பதிவருக்கு சந்திப்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

உம்பா, மாடு, பையன், சாராயம் என்று அடிக்கடி சொல்லும் 'பொறிமுறைப்' பதிவரும் அவரது தோட்டம் செய்யும் அண்ணாவும் சற்றுப் பிந்தியே சந்திப்பில் கலந்து கொண்டாலும் பதிவர்களுக்கு விளங்காத நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.

சந்திப்பில் முதலில் சீரியஸ் பதிவுகளை எழுதுவது எப்படி என்று எழுமாற்று அறுவடையை தடுத்த படுபாவிப் பதிவர் விளக்கமளித்தார். எந்த விடயத்தையும் சீரியஸாக எடுக்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.  தான் சிறிது காலத்துக்கு முன்னர் எழுதிய மொக்கைப் பதிவொன்றிற்கு போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லி விம்மி விம்மி அழுத படுபாவிப் பதிவரை தாடியை விரும்பும் பேஸ்புக் பதிவர் தேற்றினார். அத்தோடு அனைவரும் படுபாவிப் பதிவரை மொக்கைப் பதிவுகளையும் அவ்வப்போது எழுதுமாறும் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் எழுந்த பிரீட்டி ஜிந்தாவை விரும்பும் பதிவர் பயனேயில்லாமல் பதிவெழுதுவது எப்படி என்று விளக்கமளித்தார்.  சமூகத்துக்கு வேண்டியதை பதிவர்கள் ஒருபோதும் எழுதக்கூடாது என்றும் பதிவர்கள் சுயத்தை இழந்தாலே அவ்வாறு பிரயோசனமில்லாமல் எழுதமுடியும் என்றும் கருத்துத் தெரிவித்தைதை கிங்கொங் பதிவர் விழுந்து விழுந்து வரவேற்க முயன்றதால் அப்பகுதியில் நிலநடுக்க, சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அத்தோடு மொக்கைப் பதிவுகள் எழுதவே கூடாது என்றும் சீரியஸானவற்றையே எழுதவேண்டும் என்று விளக்கமளித்தார்.


அடுத்தாக ஆண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் பேஸ்புக் புகழ் இளமைப் பதிவர் உரையாற்றினார். பதிவுலகத்தில் ஆண்களுக்கு இருக்கும் வரவேற்பைவிட பெண்களுக்கு வரவேற்புகளும், பின்னூட்டங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன என்று கூறிய இவர் காதல் நல்லது என்றும் அதில் தனக்கு அனுபவமே இல்லை என்றும் நகைச்சுவைகளை அள்ளிவீசினார்.
தான் தனது ஒவ்வொரு பதிவிலும் முழுமையாக ஆடையணிந்த ஆண்களின் புகைப்படங்களை இடுவதன் மூலம் ஆணியக் (பெண்ணியத்துக்கு எதிர்ச் சொல்லாம்) கருத்துக்களைப் பரப்புவதாகவும் பெருமையுடன் கூறிக் கொண்டார். அததோடு தான் இன்று பழைய ரீ-சேட்டை அணிந்து வந்தது ஆண்கள் சிக்கனமானவர்கள் என்ற கருத்தை விளங்கப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டார்.


பேஸ்புக் பதிவர் சீரியஸாய்க் கதைத்ததால் அனைவரும் கடுப்பாகியதால் அனைவருக்கும் சூட்டுநாயும், பீச்சாக்களும் சாப்பிட வழங்கப்பட்டதோடு வைன், ஜின், விஸ்கி உட்பட்ட எனக்குப் பெயர் தெரியாத இன்னோரன்ன குடிபானங்களும் வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட சூட்டுநாய்களையும், பீச்சாக்களையும் தாங்களே வீட்டில் தயாரித்ததாக சாராயப் பெயருடைய சகோதரரர்கள் கருத்துத் தெரிவித்ததால் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
வழங்கப்பட்ட விஸ்கி, வைன் போன்றவற்றை தாங்களே காலைப்பயன்படுத்தி தயாரித்ததாக பெட்டிப்பதிவரும் இன்னும் சிலரும் தெரிவித்ததைத் தொடர்ந்து பலருக்கு ஏற்பட்ட வாந்திகளை (வாந்தி தான். எழுத்துப்பிழை எதுவும் இல்லை) அடக்கிக் கொள்ள புத்திசாலியான பேஸ்புக் பதிவர் தேசிக்காய் வழங்கி ஏற்படவிருந்த அனர்த்தத்தைத் தவிர்க்க பெரிதும் உதவினார்.


இதன்பின்னர் கூகுள் குழுமத்தை பயனில்லாமல் எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பெட்டிப் பதிவர் விளங்கப்படுத்தினார்.
தான் குழுமத்தை சிரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், அதுவே சிறப்பானது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பாரம்பரிய உபகரணங்களை இளைய சமுதாயம் மறந்துவருவதால் அவற்றை இளைய சடுதாயத்திற்கு ஞாபகப்படுத்த புதிய கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு தான் கம்பஸ்ஸில் வாளி போடுவதாக வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும் யாரும் அதைப் பற்றி குழுமத்தில் வாயைத் திறக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். அப்படிச் செய்யின் அவர்களுக்கு கறுத்த வான் அனுப்பப்படும் என்று மிரட்டினாலும் எழுந்த கிங்கொங் பதிவர் 'விம் இருக்கப்பயமேன்?' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.
இடையே எழுந்த படுபாவிப்பதிவர் தான் கணக்குவிடுவதில் வல்லவர் என்றும் தான் தரம் 6 இல் கணித பாடத்துக்கு 53 புள்ளிகளைப் பெற்றேன் என்றும் அதனால் பதிவர் சந்திப்புத் தொடர்பான கணக்கு விடுவதைத் தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.


இதன்பின்னர் இறுதி அம்சமான பின்னூட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை கிங்காங் ஆரம்பித்துவைத்து தான் அதிகமாக பின்னூட்டுவதை விரும்புவதில்லை என்றும் ஒரு பதிவுக்கு தலா ஒவ்வொரு பின்னூட்டம் மட்டுமே இடுவதை வலியுறுத்துவதையும் கேட்ட பெட்டிப்பதிவர் கடுப்பாகி கிங்கொங் பதிவருக்கு அடிக்கச் சென்றதோடு தன்னை இவர் ஒரு குழுவோடு ஓட ஓட விரட்டி 405 பின்னூட்டங்கள் போட்டதாகவும் இவர் பின்னூட்டமிடுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
எனினும் கோபத்தோடு எழுந்த பேஸ்புக் பதிவர் தனது பதிவுகளை விட தனது தளத்தில் பின்னூட்டங்களிற்கே அதிக வரவேற்பு இருப்பதாக ஒரு இரகசிய அறிக்கை கிடைத்திருப்பதாகவும் அதனால் பின்னூட்டவாதிகள் யாரையும் தான் இழக்கவிரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பின்னூட்டங்களில் தாடிகள் பற்றிப் புகழ்ந்து பின்னூட்டமிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறான ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்குப்பின்னர் மண்டபத்துக்குள் இருபதுக்கு இருபது கிறிக்கெற் விளையாடப்பட்டது.
அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.



மறுதலிப்பு 1: இது முற்றுமுழுதாக நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது.

மறுதலிப்பு 2: இறுதியாக வெற்றிகரமாக நடந்துமுடிந்த பதிவர் சந்திப்பு 2 இனை கேவலப்படுத்தும் எண்ணமும் கிடையாது.

இலங்கையிலுள்ள தமிழ்மொழியில் பதிவிடும் பதிவர்களின் சந்திப்பு நேற்று டிசம்பர் 13ம் திகதி கொழும்பு 6, வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது...

இது தொடர்பாக பதிவிடும் எண்ணம் இருந்தாலும் ஏனைய நண்பர்களின் பதிவுகள் வரை பொறுத்திருந்து பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய பதிவில் என்னால் பதிவர் சந்திப்பை சரி என்றோ பிழை என்றோ விமர்சனம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

ஏனையவர்கள் பதிவர் சந்திப்புத் தொடர்பான ஆரோக்கியமான விமர்சனப் பதிவுகளை முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதற்கிடையில் நேற்றைய சந்திப்புத் தொடர்பான சில புகைப்படங்களை உங்களோடு பகிரலாம் என்று நினைக்கிறேன்.

சில புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பின் மன்னிக்கவும்.
சில கலந்துரையாடல்களின்போது நான் சந்திப்பில் இருக்காததால் சந்திப்புத் தொடர்பான முழுமையான ஆவணமாக எனது புகைப்படங்களை பகிரமுடியாமல் இருக்கிறது.

எனது கமராவில் அகப்பட்ட புகைப்படங்களில் பகிரக்கூடிய நிலையில் ஓரளவுக்குத் தெளிவாக இருந்த புகைப்படங்கள் இவை.


நிறைய நாட்களாக இந்தவகைப் பதிவொன்னு (அதாவது சுயதம்பட்டப் பதிவு போடோணும் எண்டு ஆசை... ஆனா ஏனோ போட மறந்திற்று வந்தன்...
அண்டைக்கு திண்ணையில கதைச்சுக் கொண்டு இருக்கும்போது வந்தியண்ணா தான் கிறிக்கெற் அனுபவத்த பதிவிடப் போறன் எண்டு சொன்னதும் எனக்கு பழைய ஆசை வந்திற்றுது....

இது கிறிக்கெற்றில் எனது சுவாரசிய அனுபவங்கள். உங்களுக்கும் சுவாரசியமா இருக்கும் எண்டு நம்புறன்.


நான் கடினப்பந்து கிறிக்கெற்றுக்குள்ள போனதே ஒரு பெரிய சுவாரசியமான கதை.
நான் இப்ப இருக்கிற மாதிரியே (குண்டாவா எண்டு கேட்டா வேட்டைக்காரன் படம் போட்டுக் காட்டுவன் எண்டு சொல்ல மாட்டன்...) கிறிக்கெற் பைத்தியம்.
பள்ளிக்கூடத்தில அணிவீரர்களுக்கு பயிற்சி நடக்கேக்க மைதானத்துக்கு வெளியே நிண்டு அதையே பாத்துக்கொண்டு நிப்பன்.
நான் உப்பிடி நெடுகலும் நிக்கிறதப்பாத்த பயிற்சியாளர் சண்முகலிங்கன் சேர் (உண்மை அவர் அப்ப பயிற்சியாளர் இல்ல. ஆலோசகராத் தான் இருந்தார்) ஏன் நிக்கிறாய்? வந்து மைதானத்தில நில்லு எண்டு என்னை மைதானத்துக்குள்ள அழைச்சிற்றுப் போனார்.
(15 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சி அது. எனக்கு அப்ப 12 வயது.)
(நான் பாடசாலை சீருடையில தான் நிண்டன்...)

போய் நான் முதலில நான் நிண்ட இடம் fine leg பகுதி தான். போய் நிண்ட 1,2 பந்திலயே ஒரு பந்து சீறிக் கொண்டு வந்திச்சு.. நானும் மென்பந்து பாய்ஞ்சு பிடிக்கிற நினைப்பு இருந்து அந்த வேகத்த மனசில வச்சு பாய்ஞ்சன்... அதுக்குள்ள பந்து ஓடீற்றுது. அப்ப தான் முதல் பாடம் படிச்சுக் கொண்டன் கடினப் பந்தைக் களத்தடுப்புச் செய்யிறதுக்கு ஒரு விசேட வேகம் வேணும் எண்டு.
அப்பிடியெ கொஞ்ச நேரம் களத்தடுப்புச் செய்திற்று இருக்க 'போல் போடத் தெரியுமோ?' எண்டு கேட்டார்...
நான் வழமையப் போல 'பெருசாத் தெரியாது' எண்டு சொன்னன்.
(அடக்கமெல்லாம் இல்ல... என்ர குணமே இது தான். தாழ்வு மனப்பான்மை என்று வைத்துக் கொள்ளலாம்.)
'அது பரவாயில்லை. வந்து போடு' என்றார்.


சரி நானும் தயங்கித் தயங்கி போனா அங்கால துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தவரப் பாத்ததும் நடுக்கம் கூடிற்று. அவர் தான் அணித்தலைவர். அற்புதமான துடுப்பாட்ட வீரர். அந்த மனுசன் மற்றைய அணிகளை மொங்கியெடுக்க நான் தூர இருந்து பாத்திருக்கிறன்.
சரியெண்டு போய் தயங்கித் தயங்கி என்ர ஓவ் ஸ்பின்னை போட்டேன்.
கடினப்பந்து பிடிக்கவே கஷ்ரமாயிருந்தது.
கஷ்ரப்பட்டு பந்துவீசினன். அவர் இடதுகைத் துடுப்பாட்ட வீரர். நான் over the wicket ஆல தான் போட்டன். பந்து கணக்கா ஓவ் ஸ்ரம்ப் பகுதியில் விழுந்து விலகிச் சென்றது. மனுசன் அத defend பண்ணப் பாத்து அது அவரின்ர துடுப்பு ஓரத்தில பட்டு விக்கெற் காப்பாளரிடம் போய் தஞ்சமடைந்தது.
அதற்காக சண்முகலிங்கன் சேர் முதுகில தட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு.
வந்த சின்னப் பெடியன் போட்ட முதல் பந்திலயே ஆட்டமிழக்கப் பண்ணிற்றான் எண்டு எல்லாரும் என்ன கெட்டிக்காரனாப் பாத்தாங்கள்.

அண்டைய நாள் முடியிற நேரம் சண்முகலிங்கன் சேர் தொடர்ந்து பயிற்சிக்கு வா எண்டு சொன்னார். நான் எதிர்பார்த்திரா விடயம் இது. நானும் சந்தொசமா பயிற்சிக்குப் போனன். அந்தக் காலத்தில மாவட்டமட்டப் போட்டிகள் எல்லாம் முடிஞ்ச படியா பயிற்சிகள் கொஞ்ச நாளில முடிஞ்சுது.

அடுத்த வருசம் எப்பிடியாவது பயிற்சிக்குப் போறது எண்டு முடிவெடுத்து வீட்ட படாதபாடுபட்டு அனுமதி வாங்கி 13 வயதுக்குட்பட்ட அணிப்பயிற்சிக்குப் போனன்.
அந்த வருசம் அணியில சுழற்பந்துவீசும் சகலதுறை வீரரா எடுபட்டு விளையாடும் பதினொருவரில் சேர்க்கப்பட்டேன்.

அந்த வருசப் பயிற்சியில ஒருநாள் முக்கியமான இடத்தில வைக்கிற 'guard' ஐ வீட்ட விட்டிற்றுப் போட்டன். அந்த நாள் பாத்து அந்த பயிற்சியாளர் எனக்கு வலைப்பயிற்சியல துடுப்பெடுத்தாட வாய்ப்பு வந்திற்றுது. அண்டைக்கு என்ர முறை இல்ல எண்டாலும் 2 பேர் பயிற்சிக்கு வராம விட வாய்ப்பு (ஆப்பு....) என்னத் தேடி வந்திற்றுது..
சரியெண்டு அண்டைக்கு 'சேதாரமில்லாம' துடுப்பெடுத்தாடி முடிச்சிற்றன்.

அதப்போல இன்னொருநாள் உண்மையான ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபொழுது எனக்கும் பந்துவீசிக்கொண்டிருந்த ஒருத்தனுக்கும் போட்டி வந்திற்றுது.
நான் வீணா வாயக் குடுத்திற்றன். அவன் வேகப்பந்துவீச்சாளர்.
அவன் வேணுமெண்டு என்ர உடம்ப நோக்கி பவுண்சர்கள வீசத் தொடங்கினான்.
நானும் எவ்வளவு முடியுமோ அவ்வளவ அடிச்சன் அல்லது அடிக்க முயற்சிச்சன்.
ஒரு பந்து போட்டான் பாருங்கோ.... யப்பா... வந்து வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில வந்து 'டொங்' எண்டு அடிச்சிச்சு. என்ன வேதனையப்பா...
ஆனா பவுன்சர் பந்துக்கு ஆறு ஓட்டம் அடிச்சுக் காட்டுறன் எண்டுற சவாலுக்காக 5,6 தரம் குனிஞ்சு எழும்பிற்று திரும்பவும் துடுப்பெடுத்தாடினா அடுத்த பந்து நெஞ்சில.
அவ்வளவு தான்... வலியெண்டா வலி தான்...
பயிற்சியாளர் அடிச்சுக் கலைச்சுவிட்டார் போய் ஓய்வெடு எண்டு...

அதுக்குப் பிறகு ஒருநாள் பரியோவான் கல்லூரியோட நடந்த போட்டியொண்டுக்கு முதல்முதலா என்ர குடும்பத்தில இருந்து அண்ணா போட்டியப் பாக்க வந்தார். அவர் வந்த உடனயே நான் துடுப்பெடுத்தாட வேண்டி வந்திற்றுது.
போன முதல் பந்து ஒருபடுபாவி ஓவ் ஸ்பின் போட்டான். நானும் அழகா defend பண்ணுவம் எண்டு பண்ணினா அது துடுப்புக்கும் காலுக்குமிடையால போய் முதல் பந்திலயே போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்திற்றன். பெருத்த அவமானம்....

நிறைய அலட்டப்படாது கண்டியளோ....
இது கடைசி விசயம்.
ஒரு கல்லூரிக்கும் (பெயர் வேணாம்.) எங்கட கல்லூரிக்குமிடையிலான போட்டி நடந்துகொண்டிருந்தது.
நான் எனக்குப் பிடித்த சிலி மிட் ஓவ் இல் (துடுப்பாட்ட வீரருக்கு அருகில் தலைக்கவசத்தோடு நிற்கும் இடம்) நின்று கொண்டிருந்தேன்.
நாங்கள் இனிங்ஸ் வெற்றி ஒன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருந்தோம்.
4 விக்கெட்டுக்கள் எடுக்க வேண்டி இருந்தது. போட்டி நிறைவடைய கொஞ்ச நேரம் தான் இருந்தது.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிக் கொண்டிருந்தார்.
அது ஒரு பவுண்சர். துடுப்பாட்ட வீரர் திமிறி பந்தை விட்டு விலக முயற்சித்த வேளையில் பந்து துடுப்பு ஓரத்தில் பட்டு மேலெழுந்தது. எனக்கு சாதாரணமாக எட்டவில்லை. இனிங்ஸ் வெற்றி வேண்டும் என்ற வெறியில் பாய்ந்தேன் ஒரு பாய்ச்சல்... பந்து என்கையில். அப்படியே கீழே விழும்போது முழங்கை நிலத்தோடு அடித்து பந்து கையை விட்டு நழுவ முற்பட நான் அமுக்கிக் கொண்டேன். எனினும் அந்தக் கணத்தில் பந்து நிலத்தில் பட்டுவிட்டது.
நான் பாய்ந்த தருணத்தில் எனக்கு எதுவுமே நினைவில்லை. எனக்கு பாய்ந்ததும், விழும்போது ஏற்பட்ட வலியும் தான் மனதில் தெரிந்தன.
ஆட்டமிழப்பைக் கோரினேன். நடுவர்கள் இருவரும் சிறிதுநேரக் கலந்துரையாடலின் பின்னர் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் அறிவிக்க எடுத்துக்கொண்ட நேரத்தில் எனக்கு முழுவதும் புரிந்து பந்து நிலத்தில் பட்டது நினைவுக்கு வந்தபோதிலும் நடுவர்கள் கடைசிநேரத்தில் சொல்கிறேன் என்று தப்பாக நினைப்பார்கள் என்று சொல்லவில்லை.
அந்த சம்பவம் என்னை இன்றுவரையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்வையும், மனதில் ஒரு வலியையும் ஏற்படுத்துவது எனக்கு வியப்பாக இல்லை.


இது எனக்குத் தெரிந்தவரை எனது அனுபவங்கள்.
இவ்வளவு நேரம் பொறுமையாக அறுவையைத் தாங்கியதற்கு நன்றி....

ஆகா... சர்ச்சைப் பதிவர் தொடங்கிற்றான்யா எண்டு யோசிக்கப்படாது...

இரண்டு பதிவுகளை ஒன்றாக போடுவதால் தான் தலைப்பு ஒருமாதிரி மார்க்கமாக இருக்கிறது....

நண்பர்களுக்கு வணக்கம்....

நிறைய நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி....

இலங்கைப் பதிவர்களின் இனிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை (13-120-2009) 571/15 காலிவீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2 மணிமுதல் நடைபெறும் விடயத்தை அனேகமாக அனைவரும் அறிந்திருப்பீர்கள்....

நிகழ்ச்சி நிரலும் ஏற்கனவே பரவலாக அனைவராலும் பதிவிடப்பட்டுவிட்டது.

இச்சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் வருமாறு

• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்


இலங்கையிலிருந்து பதிவிடும் அனைவரையும் முடியுமானவரை தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
கலந்துகொள்ள முடியாதவர்களும், புலம்பெயர்ந்த இலங்கைப் பதிவர்களும், ஏனைய விரும்பியோரும் இந்தச் சந்திப்பை http://www.livestream.com/srilankatamilbloggers என்ற முகவரியூடாக நேரடியாகக் கண்டு மகிழலாம்.

இதுவரை பதிவிடாத பதிவிட விரும்புவோரும், வலைப்பதிவுகளின் வாசகர்களும் கலந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: இதுவரை தங்கள் வருகையை உறுதிப்படுத்தாத நண்பர்கள் தயவுசெய்து http://srilankantamilbloggers.blogspot.com/ என்ற முகவரிக்குச் சென்று உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் வரவை உறுதிப்படுத்துவது ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும் என்பதால் முடிந்தவரை விரைவாக உறுதிப்படுத்துங்கள்.

எங்களது கூகுள் குழுமத்தில் இணையாத இலங்கைப் பதிவர்களை http://groups.google.com/group/srilankantamilbloggers என்ற குழுமத்தில் இணையுமாறும் கேட்டுக் கொள்கிறோம்....

இதுபற்றிய மேலதிக விபரங்களை

http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/524904f0d3ba6e17
என்ற முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்.



சரி...
தலைப்பின் ஒருபகுதிக்கான பதிவு....

நாய்கள் யோகாசனம் செய்தால் எப்படி இருக்கும்?

பதிவின் நீளத்தை குறைக்கும் முகமாக படங்களை சிறியதாக்கி இட்டிருக்கிறேன்...
படங்களை பெரிதாக்க படங்களில் அழுத்திப் பாருங்கள்....