க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

எல்லா நாடுகளுக்கும் கடன் உண்டெனில் (உண்மை! அமெரிக்காவிற்கும் கடன் உண்டு.) பணமெல்லாம் எங்கே செல்கிறது.
(விசித்திரம்)

கால்நடைகளுக்கான உணவின் சுவை அதிகரிக்கப் பட்டால் அதை சுவைத்துப் பார்ப்பது யார்?
(ஒரு யோசனை கொடுக்கத் தான் தேவை)

ஒளிக்கு ஒரு வேகம் இருக்கெனில் இருளின் வேகம் என்ன?
(முட்டாள் தனம்)

விமானம் விபத்தைச் சந்திக்கும் போது விமானத்திலுள்ள கறுப்புப் பெட்டி சேதமடையாது எனில் கறுப்புப் பெட்டியாலேயே முழு விமானத்தையும் ஏன் செய்யக் கூடாது?
(மிக நல்ல யோசனை)

பதிப்புரிமைக்குரிய அடையாளத்திற்கான காப்புரிமை யாரிடம் உள்ளது?
(யாருக்கு தெரியும்?)

நீருக்கடியில் உங்களால் அழ முடியுமா?
(ஒரு முறை முயற்சி செய்கிறேன்)

பொதுவாக கடுமையாக வேலை செய்வதை நாய் போல உழைத்தல் என்கிறோம். ஆனால் நாய் பொதுவாக ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வு தானே எடுக்கிறது?
(வேறு எதையோ குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்)

தொலைபேசியிலும், கணிப்பானிலும் இலக்கங்கள் இலக்கத் தட்டில் ஒன்றுக் கொன்று வேறுமாதிரி இருக்கக் காரணம் என்ன?
(கடவுளுக்கு தான் தெரியும்)

மீனுக்கு எப்போதாவது தாகமெடுக்குமா?
(கேட்டுச் சொல்கிறேன்)

வட்ட வடிவிலான அறையின் மூலைப் பகுதியை கண்டுபிடிக்க உங்களால் முடியுமா?
(ஒற்றைக் கண்ணால்?)

மரங்களில் ஓய்வெடுக்கும் பறவைகள் நித்திரை செய்த பின்பும் ஏன் கீழே விழுவதில்லை?
(இன்று இரவு பார்க்கத் தான் வேண்டும்)

முதலில் வந்தது பழமா அல்லது ஒரேஞ் (செம்மஞ்சள்) வர்ணமா?
(வித்து)

சோளம் எண்ணை சோளத்திலிருந்து செய்யப்படுகிறது எனி்ல், மரக்கறி எண்ணெய் மரக்கறிகளிலிருந்து செய்யப்படுகிறது எனில் குழந்தை (Baby oil) எண்ணைய்???
(அபிப்பிராயம் இல்லை)

ஒருவருக்கு நினைவிழப்பு ஏற்படின் தனக்கு நினைவிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஞாபகம் வைத்திருப்பாரா?
(யாராவது உதவி செய்யவும்)

நீருக்கடியில் வைத்து பலூனை உடைக்க முடியுமா?
(ஆம். உங்களால் முடியும்.)

கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் 'buildING' என அழைக்கப்பட காரணம் என்ன?
(புதுமையாக இருக்கிறது என???)

நீங்கள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் வானொலியை இயக்கினால் உங்களால் வானொலியின் ஒலியைக் கேட்க முடியுமா?
(விஞ்ஞான ரீதியாக சிந்திக்க வேண்டி இருக்கிறது)

நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறீர்களெனில் அந்த நேரத்தில் உங்கள் வாகன முகப்பு மின்விளக்கை ஒளிரச் செய்யின் என்ன நடக்கும்?

ஒருவர் நிலமொன்றை உரிமையாக வைத்திருப்பாராயின் பூமியின் அடிவரை அந்த நிலம் அவருக்கா சொந்தம்?
(இது நன்றாக இருக்கிறது)

பொதுவாக எல்லா கார்களுக்கும் வேகமானியில் 130 வரை காணப்படும். ஆனால் சட்டரீதியாக அந்தளவு வேகமாக செல்ல முடியாதே? பிறகேன்???
(முட்டாள் தனம். விதியை உடையுங்கள்)

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தடை என்றால் பெரும்பாலான மதுபான நிலையங்களில் வாகனத்தரிப்பிட வசதி காணப்பட காரணம் என்ன?
(அது தானே?)

0 பின்னூட்டங்கள்: