நாட்டில அவனவன் பண்ற கூத்தப் பாத்த நமக்கும் ஏதாவது கூத்துப் பண்ணோணும் எண்டு ஒரு ஆசை வந்திச்சு. சரி புதுவருடம் வர்றதால அதக் காரணமா வச்சுக் கொண்டு எங்கவாவது போகலாம் எண்டு.....நினைச்ச்ச்சன்.... சரி நம்மளால ஐ.பி.எல் பாக்க தென்னாபிரிக்காவுக்கா போக முடியும்? (பணப் பிரச்சினை இல்ல... நமக்கு நிறைய தனியார் வகுப்புக்கள் இருக்கு... அடிக்கடி நிறைய நாள் போகாம விட்டா {சாதாரணமா சொல்றதெண்டா 'இடக்கிட கோயிங், அடிக்கடி கட்டிங்'} ஒருத்தன் குறைஞ்சாலும் பறவாயில்ல எண்டு அடிச்சு கலைச்சிடுவாங்க.)
சரியெண்டு வவுனியாவில அக்கா இருக்கிறா தானே அங்க போவம் எண்டு நான் யோசிக்க முதலே அக்காவே கூப்பிட்டிட்டா.
(நான் வவுனியா போக நினைச்சதுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதையெல்லாம் சொல்லி அரசியல்வாதி ஆக விரும்பேல.)
சரி நானும் போனன்.
நான் போன இராசிக்கு அண்டைக்கு பொலன்னறுவ க்கு கிட்ட எங்கோ ஒரு புகையிரதம் தடம்புரள, நம்மள கல்கமுவ எண்டொரு இடத்தில புகையிரதத்தில இருந்து இறக்கி பேருந்து மூலம் (உள் மூலமா, வெளி மூலமா எண்டு கேக்கப்படாது. பிச்சுப் புடுவன் பிச்சு.) இன்னொரு நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து இன்னொரு புகையிரதத்தில் மதவாச்சி சென்று அங்க பதிவெல்லாம் முடிச்சிற்று அங்கயிருந்து பேருந்து மூலம் வவுனியா போனன்.
எங்க வீடு பிரதான வீதியும் இன்னொரு வீதியும் சந்திக்கும் மூலையில். வலது பக்கமாக 200 மீற்றர் போனால் காமினி மகா வித்தியாலயம். ஒரு தொகை வன்னி சகோதர சகோதரிகள் அங்கு தான் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். இடது பக்கமாக 200 மீற்றரில் இணைய மேயும் இடம்.
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில வச்சாலும் அதின்ர புத்தி மாறுமோ???
அங்க போனதும் இணைய மேயும் இடத்துக்கு போறத பழக்கமாக்கிற்றன்.
ஒருநாள் போய் அவுஸ்ரேலிய தென்னாபிரிக்கா 4ஆவது மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகளின் ஹைலைட்ஸை (தமிழ்ல என்னெண்டு சொல்றது?) பாத்திற்று வலைப்பூக்கள எல்லாம் மேஞ்சிற்று தற்செயலா நேரத்தப் பா......த்த்தத்தன். 7.45... அடப்படுபாவி வவுனியாவில ஊரடங்கு சட்டமெதுவும் இருக்குமோ தெரியாது எண்டு நமக்கு இருக்கிற கொஞ்ச மூளையும் (கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றன்... இருக்கு...) நம்மள மேலும் குழப்பி விட்டிற்று. சரியெண்டு கடையில இருந்து வெளில வந்தன்.
வெந்த புண்ணில வேல் அல்லது சிலுவை பாய்ச்சிறது போல வாசலில ஒரு ஆமி மாமா... ஈரக்குலை நடுங்கிறதெண்டா என்னெண்டு அண்டைக்கு தான் தெரியும். குருவி படத்தில 'கோச்சா' எண்ட பெயர கேட்டோண்ண மலேசியாவில ஒருத்தன் நடனம் ஆடுறத யோசிச்சு பாருங்க...
டேய் யார்றா அது... சைலன்ஸ்... அதான் எழுதிக்கிட்டிருக்கிறமுள்ள...
(5 நிமிடம் அமைதியா இருக்கிறன். நீங்களும் 5 நிமிடம் பேசாம இருங்கோ...)
என்ர புண்ணியத்தில அவன் ஒண்டுமெ கேக்கேல... என்னால் 'என்' செயல்... (நான்........கடவுள்...!!!)
நானும் தப்பினமெண்டு நினைச்ச்ச்ச்ச்ச்ச்ச்சன்..... ஒரு பத்து அடி எடுத்து வச்சிருப்பன்... மொத்தம் மூணு பேரு... தங்களால எவ்வளவு முடியுமொ அந்தளவு பாரங்கள முதுகில வச்சுக் கொண்டு கையில சுடுற சாமானையும் ('தோசைக் கல்'லா எண்டு கேக்கிறதுக்கு உதை விழும்... ரொம்பத்தான் நக்கல்...) வச்சுக் கொண்டு நிண்டாங்க. ஒரு முதியவர சோதனை செய்த கொண்டு இருந்தார்கள். வயசு போன ஆளுக்கே சோதனை எண்டா... நமக்கு...???
நாம என்ன தான் அப்பாவி எண்டாலும் 200 கிலோகிறாம் நிறை, 180 சதம மீற்றரில இருக்கிற ஒருத்தன பாத்து யாருமே அப்பாவி எண்டு நம்ப மாட்டாங்க எண்டு எனக்குத் தெரியும். அதுவும் தாடியோட...!!!
அடையாள அட்டை பொக்கற்ல தொட்டுப் பாத்தன்... இருக்கு... காவல்துறை பதிவுத் துண்டு (அதாங்க பொலிஸ் றிப்போட்) இருக்குமோ எண்டு ஒரு சந்தேகம்... பயந்த கொண்டு கிட்ட போக அவங்க எங்கயோ வாய் பாக்க நான் ஓடி வீட்ட போய்ற்றன்...
கதையும் முடிஞ்சு கத்தரிக்காக் கறியும் முடிஞ்சு... ஓடுங்கோ....