க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஆங்கிலத்தை சுலபமாக கற்க புதிய வழி...

முதல் பயிற்சி...

கீழ்வருவதை வேகமாக தொடர்ந்து சொல்லுங்கள்...


i'm can i...


i'm when i...

ம்...
இன்னும் வேகமா...

ம்...
ம்....

'ஓர் ஆணிண் அல்லது பெண்ணின் புற அழகிற்காக அவர்களை மணப்பது என்பது ஓர் வீட்டின் புற வர்ணப் பூச்சிற்காக அந்த வீட்டையே வாங்குவது போலாகும்...'
-சொன்னவர் சார்ள்ஸ் டிக்கன்ஸ்.

'கோப மனோநிலையில் உள்ள போது முடீவுகள் எடுப்பதையும்,
சந்தோசமாக உள்ளபோது சத்தியங்கள் வழங்குவதையும் தவிருங்கள்.'

'சந்தோசம் என்பது சிறிய சிறிய விடயங்களில் கூட கிடைக்கும். ஆனால் சந்தோசம் என்பது சிறிய விடயமல்ல...'

'அன்பு என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது, மாறாக இதயத்தில் இருக்க வேண்டும்.
கோபம் என்பது இதயத்தில் இருக்கக் கூடாது, வார்த்தைகளில் மட்டும் தான் இருக்க வேண்டும்.'

'மற்றவர்களின் மனங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்...'
-சொன்னவர் இலங்கையின் முடிசூடா மன்னன், உலகத்தின் கலங்கரை விளக்கு என்று அழைக்கப்படாமல் வெட்டிப்பயல் என அழைக்கப்படும் க.கோபி கிருஷ்ணா.
(வேற யாரும் இத சொன்னாங்களோ தெரியேல... ஆனா எனக்கு ஒரு சந்தர்ப்பத்தில் தானா வந்தது இந்த பொன் மொழி. இப்பிடி தான், சில நாட்களுக்கு முன்பு நான் மிகவும் மதித்த ஒரு நட்பு எனக்கு துரோகம் செய்ய அந்த மனநிலையில் கூட ஒரு கருத்து சொன்னன் அந்த உறவுக்கு..
'உண்மைகள் எப்போதும் மதிக்கப்படுவதில்லை, மாறாக மிதிக்கப்படும்...
உண்மையாக இருப்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன???')

'பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.
பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்.'
(ஆங்கிலத்திலிருந்து நான் மொழிபெயர்க்கும் போது சுவை குறைந்து விட்டது.
'Leave something for parents,
never leave parents for something.
எனக்கு மொழிபெயர்ப்பு எல்லாம் அந்தளவுக்கு வராதுங்க...)

'வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது...
தோல்வி என்பத நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது தவறில்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.'

கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் யாரும் தமக்கு மொட்டை போடுவதில்லை...
மாறாக மறுபடியும் தங்களுக்கு முடி வளரும் என்ற நம்பிக்கையில் தான் மொட்டை போடுகிறார்கள்...
-சொன்னவர் பெரியார்.

நிறைய நாளுக்கு பிறகு எழுதுறன்...
ஆனா முந்தி எழுத ஆரம்பிக்கேக்கயே என்ன எழுதோணும் எண்டு ஒரு சட்டகம் (பிறேம்) மனதில வந்திடும்.
(டேய் யார்றா அங்க 'பிளான் பண்ணி எழுதிற மாதிரி நீ என்னத்தடா இதுவர எழுதி கிழிச்சுருக்கிறாய்' எண்டு கேக்கிறது? ஆ? இப்பிடி உண்மய கதச்சா குறூப் வச்சு அடிப்பன். நாங்க எல்லாம் ஊரில பெரிய ரவுடியாக்கும்... கவனம்...)
இப்ப என்ர நிலமை போர்ம் ஐ இழந்த மத்தியூ ஹெய்டனின் நிலமை...
ம்...

அண்மையில வெளியிடப்பட்ட வில்லு படப் பாடல்களை கேட்க முடிந்தது. வழமையாக விஜயின் பாடல்களைப் போல இருக்கின்றன.
பாடல்களின் காட்சிகள் வெளிவந்த பின்னர் அவை வழமையைப் போல ஜொலிக்கும் போல இருக்கு.
ஆனா அந்த 'ஹேய் ராமா' பாடல் என்னை கொஞ்சம் இரசிக்க வைத்தது.
தொடக்கத்தில் வழமையான கதாநாயக வீர வசனங்களை கொண்டிருக்கும் பாடலில் கொஞ்சம் நல்ல கருத்துக்களையும் சேர்த்து இருக்கிறார்கள். அதாவது கைச்சல் மருந்துக்கு மேலே இனிப்ப தடவுதல் போல என்று கெளரவமாக சொல்லலாம்.

'ஹேய் ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டன்...
ஹெய் பீமா பீமா பீமா பீமா பீமாகிட்ட கதையை கேட்டன்...
முருக முருக முருக முருகன்கிட்ட வேல கேட்டன்...
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்கிட்ட மலய கேட்டன்...
உங்ககிட்ட அன்ப கேட்டன்...'
(அன்பு மட்டுமா? வாக்கு கேக்கேல தானே?)

இதுக்கு பிறகு நம்மட வடிவேலுவ கொஞ்ச நாளா உழக்கிக் கொண்டு திரிஞ்ச நம்ம கோவை சரளாவ கத்த விட்டிருக்கிறாங்க...
(யெக்கா... சரளாக்கா... பிரமாதம்...)

இப்படத்தில் விஜய் இற்கு புகழ் என்று பெயராம்...
ஆகவே...

'பேரு புகழ் கொண்டவங்க ஊருக்குள்ள ரொம்ப பேரு...
பேருலயே புகழ கொண்ட என்னப்போல வேற யாரு...'

இதற்கு பிறகு தான் நான் இந்தப் பாடலை பற்றி எழுத தோன்ற காரணமான வரிகள் வருகின்றன...

'ஆண்டவன்தான் என்னப் பாத்து என்ன வேணும் எண்டு கேட்டா....
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பன்...'

அண்ண! விஜய் அண்ண! உங்கட கொஞ்ச நாள் நடவடிக்கைகளால நீங்க என்ன செய்தாலும் ஒரு மார்க்கமாவே தெரியுது...
நீங்க அரசியலுக்கு வர செய்யிறீங்களோ... உங்கட படம் ஓடுறதுக்கு செய்யிறீங்களோ... இல்ல உண்மையான பாசம், நன்றிக் கடன்ல செய்யிறீங்களோ... ஒண்டுமே தெரியேல...
யார் குற்றினாலும் நெல் அரிசியானால் சரி தானே...
ம்... ம்...
அண்ணே... விஜயகாந் அண்ணே... நீங்க கொட்டை போடுறதுக்கு முதல் விஜய் கொட்டை போட்டு மரம் முளைக்கப் பண்ணி பழம் பழுக்கப் பண்ணிடுவார் போல இருக்கே...

என்றாலும் இதற்கு பின்னர் சில வரிகள் என்னைக் கவர்ந்தன...

'பாரதி ஐ படிச்சுப்புட்டா பெண்களுக்கு வீரம் வரும்...
கார்ள் மார்க்ஸ்ஸ நெனச்சுப் புட்டா கண்களுக்குள் நெருப்பு வரும்...
பெரியார மதிச்சுப் புட்டா பகுத்தறிவு தானா வரும்...
அம்மா, அப்பாவ வணங்கிப் பாரு... எல்லாருக்கும் எல்லா வரும்...'

நல்லா தான் இருக்கு...

இந்தப் பாட்ட விமர்சனம் செய்யிறது என்ர நோக்கம் இல்ல...
ஆனா,
'ஆண்டவன்தான் என்னப் பாத்து என்ன வேணும் எண்டு கேட்டா....
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பன்...' எண்ட வரிகள் நம்மட நாட்டு ஆக்களப் பற்றி சொல்ற மாதிரி இருந்தது. அது தான் இந்தப் பாட்டுக்கு ஒரு பதிவு...