க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

கிறிக்கெற் என்பது நம்மவர்களுக்கெல்லாம் தேசிய விளையாட்டாக மாறிப் போனாலும் கிறிக்கெற் பற்றி பதிவிட்டால் அதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுப்பவனா நான்?
யார் என்ன சொன்னாலும் விடமாட்டேன் என்று தொடர்ந்து நகைச்சுவைப் பதிவுகளைத் தானே எழுதுகிறேன். என்னால முடிஞ்சத தானே எழுத முடியும்?

சரி... விடயத்துக்கு வருவோம்...
திறமை இருந்தும் சர்வதேச ரீதியில் பிரகாசிக்காத அல்லது பிரகாசிக்க முடியாமல் போன வீரர்களைப் பற்றி ஓர் பதிவிட வேண்டும் என்று நிறைய நாளாக ஆசை இருந்தது.
இதோ...
பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

இலங்கையில் இருந்து ஆரம்பிப்போம்... (ஓரளவு தற்போதைய கால வீரர்களைத் தான் கணக்கிலெடுக்கிறேன்)

1. சாமர கப்புகெதர
வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்நுட்டபத் திறன் (technic) காரணமாக சிறுவயதிலேயே இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மண்ணில் பிரெட் லீயின் பந்தை துவம்சம் செய்து இவர் ஆடிய விதத்தைப் பார்த்து இவரை இலங்கையின் எதிர்காலம் என எண்ணியவர்கள் பலர். எனினும் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை.
இவருக்கு ரெக்னிக் எனப்படும் ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவர் technically sound என பலர் அழைக்கிறார்கள். எனினும் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்தும் சறுக்கி வருகிறார்.
எனினும் இன்னும் சிறுவயது என்பதால் மீண்டு வருவார் என நம்புவோம்.


2. இந்திக்க டீ சரம்
வலதுகைத் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான இவர் இலங்கை அணியில் இடம்பெறும் நோக்கில் சிறிது காலத்திற்கு முன்னர் விக்கெட் காப்புப் பணியை விட்டுவிட்டடு தனியே துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடித்தாடும் வீரரான இவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்.
எனினும் அரசியல் காரணங்களாலோ என்னவோ தொடர்நதம் அணியில் இடம் வழங்க மறுக்கப்படுகிறார்.
இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் இலங்கையில் நடந்த இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் பதினொருவரில் இடம்பெற்றிருந்த போதிலும் டில்ஷானால் கடை மத்தியநிலை (ஆறாம் இடத்தில் என்று நினைக்கிறேன்) வீரராக மாற்றப்பட்டு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்காமல் வெறும் களத்தடுப்பாளராக விளையாடினார்.
இம்முறை இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தில் பதினொருவரி்ல் இடம் கிடைக்கவில்லை. சாமர சில்வா தொடர்ந்து பிரகாசிக்காமல் விட்ட போதிலும் இவரை விளையாட அனுமதிக்கவில்லை.
இவரது தந்தை ஓர் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பதால் தான் இந்த நிலை என அறிய முடிந்தது.
இப்போது 36 வயதாவதால் இவரை இனி அணியில் சேர்ப்பார்களா தெரியவில்லை.


3. மாலிங்க பண்டார
கிறிக்கெற் விளையாடுவதில் இரண்டாவது மிகக்கடினமான அம்சம் எனக்கருதப்படும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான இவர் பல காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. (முதலாவது கடின அம்சமாக விக்கெட் காப்புப்பணி கருதப்படுகிறது)
அதிகளவான வித்தியாசமான பந்துவீச்சு வகைகள் (variation) இல்லாததால் முன்னரே ஓரளவு கணிக்கப்படக் கூடியவராக (predictable) மாறியதும் ஓர் காரணம். (Wrist spinner's some variations - google, flipper, zooter)
அத்தோடு பந்தை அதிகளவு திருப்பும் தன்மையும் இவரிடம் இல்லை.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிறிக்கெற் என்பது துடுப்பாட்ட வீரர்களது விளையாட்டாகிவிட்டதால் ஓட்டங்களை மட்டுப் படுத்துவதே சுழற்பந்து வீச்சாளர்களது பிரதான பணியெனக் கருதப்படும் நிலையில் இவர் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளுக்கு சிறந்தவர் என்ற போதிலும் முரளி, மென்டிஸ், ஹேரத் ஆகியோர் இவரை விட முன்னிலையில் நிற்பதால் வாய்ப்புக் கிடைக்காது தவித்து வருகிறார்.


இனி இந்தியா

1. ஸ்ரீசாந்
சிலர் நான் நகைச்சுவை செய்கிறேன் எனக் கருதலாம்.
ஆனால் உண்மையில் ஸ்ரீசாந் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்.
Seam position எனப்படும் பந்தின் நூல்ப்பகுதியின் அமைவு என்பது வேகப்பந்து வீச்சாளருக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. கவனித்தப் பார்த்தீர்களானால் இவரது Seam அமைவு சிறப்பாக அமையும். (அதாவது பந்து ஆடுகளத்தை அடிக்கும் போது ஓரளவுக்கு நேராக அடிக்கும். அதிகளவுக்கு சுழராது. Scramble seam எனப்படும் ஓர் வகை இருந்தாலும் இது ஒரு வகை variation ஆகவே கருதப்படுகிறது.)
எனினும் இவரது திரும்பும் பந்துகள் (Swing) துடுப்பாட்ட வீரருக்கு நன்றாக திரும்புவதால் இவரது திரும்பலை அடையாளம் காணமுடிவதாக அலன் டொனால்ட் அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிய மாற்றமொன்றை செய்தால் இதை நிவர்த்திக்க முடியும். (வேகப்பந்து வீச்சின் இரகசியமாக கருதப்படுவது பந்து பிந்தி திரும்புதல், அதாவது late swing)
ஆனால் இதைவிட இவரது தனிப்பட்ட நடத்தைகள் தான் இவரை அதிகளிவில் பாதித்தன.
எளிதாக உணர்ச்சி வசப்படும் இவரது குணத்தால் தன் கட்டுப்பாட்டை மீறுவதால் இவரது பந்துவீச்சு பாதிக்கப்பட்டுள்ளது.
(அன்ட்ரூ நெல்லின் பந்தை நான்கு ஓட்டங்களுக்கு அடித்து விட்டு ஆடுகளத்தில் துடுப்பைச் சுற்றிச் சுற்றி இவர் ஆடிய ஆட்டம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.)


2. முனாப் பட்டேல்
தனிப்பட்ட ரீதியில் எனக்கு முனாப் பட்டேலை மிகப் பிடிக்கும்.
கவனித்துப் பார்த்தீர்களால் இவரது பந்துவீச்சுப் பாணியும் கிளெய்ன் மக்ராத்தின் பந்துவீச்சுப் பாணியும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கும்.
அருமையான line and length இல் பந்து வீசக் கூடிய திறமையுள்ளவரான இவர் விக்கெட் எடுப்பதற்கு தேவையான திரும்பல் திறனையும் கொண்டவர்.
முதலாவது மாற்ற பந்துவீச்சாளராக (first change bowler) பந்துவீசுவது என்பதொன்றும் இலகுவான விடயமல்ல.
பந்து ஆரம்ப நிலையைப் போல பெரிதாகக் திரும்பாது. (less swing)
பெரிதான Seam movement உம் இருக்காது.
ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றாவிட்டால் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது என்றும், ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினால் ஓட்டங்களை கட்டுப்படுத்துவது என்றும் இவர்களது வேலை மாறிக் கொண்டேயிருக்கும்.
முதலாவது பந்துவீச்சாளர்களாக இருந்து ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக மாறிய பின்ரே உமர் குல், மிற்செல் ஜோன்சன் ஆகியோர் நிறைய இலக்குகளை கைப்பற்றத் தொடங்கினர்.
இந்தியாவின் சிறந்த முதலாம் மாற்றப் பந்துவீச்சாளர் என ஜவகல் ஸ்ரீநாத் இனால் புகழப்பட்டவர்.

எனினும் காயங்களால் நிறையவே பாதிக்கப்பட்டவர். காயத்தால் பந்துவீச்சு வேகமும் சற்றுக் குறைந்தது.
இப்போது தான் அணியில் மீண்டும் இடம்பெற ஆரம்பித்திருக்கிறார். பார்ப்போம்....


3. ரோகித் சர்மா
முதலாவது ஐ.பி.எல் இன் பின்னர் அடுத்த ரெண்டுல்கர் எனக் கருதப்பட்டவர்.
எனினும் இவர் இருபதுக்கு 20 போட்டிகளையே பெரிதும் விரும்புகிறார்.
ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை.
இவரொன்றும் இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரர் (hard hitting batsman) அல்ல.
இவரைப் போன்ற ஆட்டமுறையைக் கொண்டவர்களை classy batsman என அழைப்பர். (மகேல, ரெண்டுல்கர், மார்க் வோ, ட்ராவிட், சமரவீர, பொன்ரிங் போன்ற பிரபலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.)
இவரிடம் நல்ல technic இருந்த பொதிலும் இருபதுக்கு 20 போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் போனதற்கு இவரின் மனப்பாங்கை (temperament) ஐ இவர் சரியாக கட்டுப்படுத்தாமை தான் காரணம் என கருதப்படுகிறது.


4. ரொபின் உத்தப்பா
தனது முதல் போட்டியில் இங்கிலாந்துக்கெதிராக 86 ஓட்டங்களை எடுத்து இந்திய துடுப்பாட்ட வீரரொருவர் தனது முதல் போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் எடுத்த அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.
அத்தோடு இந்திய அணி சார்பாக சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அரைச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருக்கிறார்.
ஓரளவு வழமையான அடிகள் மூலம் (orthodox shots) மூலம் ஓட்டங்களைக் குவிக்கும் திறனுள்ள இவருக்கும் temperament பிரச்சினை இருப்பதால் இதுவரை சர்வதேச ரீதியில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இன்னும் வயது இருப்பதாலும், 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் பின்னர் பல சிரேஷ்ர வீரர்கள் ஓய்வுபெறுவார்கள் என்பதாலும் சாதிக்க வாய்ப்புண்டு.


அப்படியே கிறிக்கெற் பற்றி பெரிதாக தெரியாதவர்களுக்காக,
temperament என நான் குறிப்பிட்டது, ஒரு துடுப்பாட்ட வீரர் துடுப்பாட்ட வீரர் ஒருபுறத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது விக்கெட்டுக்கள் மறுபுறத்தில் சரிந்தாலோ அல்லது பந்துவீச்சாளர் அருமையாக பந்து வீசினாலோ அல்லது பந்து வீச்சாளர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது கொஞ்சப் பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்கள் பெற முடியாமல் போனாலோ உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது ஆகும்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கும், தொடர்ந்து பந்துகள் எல்லைக் கோடுகளுக்கு அடிக்கப்பட்டாலோ அல்லது துடுப்பாட்ட வீரர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது பிடிகள் தவறவிடப்பட்டாலோ எரிச்சலடையாமல் பொறுமையைக் காத்து தொடர்ந்து சரியாக பந்து வீசுதல்.

பகுதி இரண்டு தொடரும்... (பாப்பம்... பாப்பம்...)
(பகுதி இரண்டில் பாகிஸ்தான் வீரர்களும், ஏனைய வீரர்களும்.)

உன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால் அவனைப் பழிவாங்க சரியான முறை உன் மனைவியை அவனோடு இருக்க விடுதல் தான்...
- டேவிட் பிஸனோற்

திருமணத்தி்ன் பின்னர் கணவனும் மனைவியும் ஓர் நாணயத்தின் இருபக்கமும் போல் ஆகிவிடுகிறார்கள். அவர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது. ஆனால் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள்.
- சச்சா குய்ற்ரி

திருமணம் என்பது எப்போதும் நல்லதே.
நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய்.
கூடாத மனைவி கிடைத்தால் தத்துவவியலாளனாக மாறிவிடுவாய்.
- சோக்றடீஸ்.

மிகப்பெரிய இலக்குகளை எமக்குக் காட்டி, நாம் அதை அடைய நினைக்கும் போது அதைத் தடுப்பவர்கள் தான் பெண்கள்.
- பெயரில்லா... (அனானி...)

என் வாழ்வில் நான் விடையளிக்க முடியாமல் போன மிகப்பெரிய கேள்வி...
'பெண்களுக்கு உண்மையில் என்ன வேண்டும்?'
-டுமஸ்.

நான் என் மனைவியிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசினேன்.
அவள் ஓரிரண்டு பந்திகள் பேசினாள்.
- சிங்மன்ட் பிரெட்

சிலர் எங்கள் நீண்ட திருமண வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள்.
நாங்கள் உணவுவிடுதிக்குச் செல்ல வாரத்தில் இரண்டு நாட்களை ஒதுக்குகிறோம்.
ஒரு சிறிய மெழுகுவர்த்தியில்.... ஓர் இரவு உணவு.... மென்மையான இசை... மற்றும் சிறிய நடனங்கள்...
மனைவி வியாழக்கிழமை செல்வாள்... நான் வெள்ளிக் கிழமை செல்வேன்...
- பெயரில்லா...

இலத்திரனியல் வங்கியியலை விட வேகமாக பணத்தை பரிமாற்றும் நடவடிக்கை ஒன்று இருக்கிறது...
அதை திருமணம் என்று அழைக்கிறார்கள்.
- ஷாம் கினிசன்.

என் இரண்டு மனைவிமாரோடும் எனக்கு துரதிஷ்ரம் தான்...
முதலாமவள் இறந்துவிட்டாள்... இரண்டாமவள் உயிரோடு இருக்கிறாள்...
- ஜேம்ஸ் ஹொல்ற் மக்கவ்ரா.

உங்கள் மனைவியின் பிறந்த தினத்தை வாழ்க்கை முழுவதும் மறக்காமல் இருக்க சிறந்த வழி, ஒரு முறை அவளின் பிறந்த தினத்தை மறத்தல் தான்...
- நாஷ்.

திருமணத்திற்கு முன்னர் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா...?
எனக்கு விரும்பிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன்.
- பெயரில்லா...

நானும் என் மனைவியும் இருபது வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
பின்பு இருவரும் சந்தித்துக் கொண்டு காதலில் விழுந்தோம்.
- ஹென்னி ஜங்மான்.

நல்ல மனைவி என்பவள் எப்போதும் தன் கணவனை மன்னிப்பாள், பிழை தன்பக்கம் இருக்கும் போது.
- றொட்னி டேன்ஜர்பீல்ட்.

(அவ்வப்போது சேர்த்து வைத்திருந்தவை. திடீரென்று பார்த்தால் ஒரு பதிவு போடுமளவிற்கு சேர்ந்திருந்தன.
அதனால் மனைவிமாரைப் பற்றி ஒரு பதிவு. எதுவுமே என் சொந்தக் கருத்து இல்லை. ;)
ஏற்கனவே மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிக் கதைத்தாலும் நான் சின்னப் பையன் என்பதால் பிரச்சினைகள் வராது என்று பதிவுலக சோதிட சிங்கம் வந்தியண்ணா தனது சோதிடப் பதிவில் சொல்லியிருப்பதால் தைரியமாக பதிவிடுகிறேன்.)

**********************************************************************************************************

முதலாமவன் : என் மனைவி தேவதை... என் மனைவி தேவதை...
இரண்டாமவன்: நீ அதிர்ஷ்ரக் காரன்... என் மனைவி இப்போதும் உயிரோடு தான் இருக்கிறாள்.


மனைவி: என்னங்க... எங்கட மகள் யாரையோ காதலிக்கிறாள் எண்டு நினைக்கிறன்.
கணவன்: எப்பிடி உறுதியா சொல்றாய்?
மனைவி: அவள் இப்ப என்னட்ட எதுக்குமே காசு கேக்கிறதில்ல...


நட்பு என்றால் இது தான்...
ஒரு நபர் இன்னொருவரிடம் கூறுகிறார்.
'எனது மனைவி எனது நண்பனொருவனுடன் ஓடிவிட்டாள். நான் எனது நண்பனை இழந்து தவிக்கிறேன்.

1. உங்கள் கடவுச்சொல்லை உங்களை அறியாமலேயே உங்கள் நுண்ணலை அடுப்பில் அழுத்தியிருப்பீர்கள்...


2. Cards விளையாட்டை உண்மையான Cards ஐக் கொண்டு விளையாடி பல வருடங்கள் ஆகியிருக்கும்...


3. 3 பேரைக் கொண்ட உங்கள் குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி இலக்கங்கள் இருக்கும்...


4. உங்களுக்கு மறுபுறத்தில் அலுவலகத்தில் வேலைசெய்யும் நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்கள்...

5. உங்கள் முன்னாள் நண்பர்கள் பலருடன் தொடர்பில் இருக்காத காரணம், அவர்களிடம் ஓர் மின்னஞ்சல் கணக்கு இல்லை என்பதாலாகும்...


6. வீட்டு வாசலில் வண்டியுடன் வந்தபின்னர், வாசல் கதவைத் திறக்குமாறு கோர வீட்டிலுள்ளவர்களை உங்கள் அலைபேசியில் அழைப்பீர்கள்...


7. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஒவ்வொன்றின் அடிப்பகுதியிலும் அனேகமாக வலைத்தள முகவரி காண்பிக்கப்படும்...


8. வீட்டிலிருந்து செல்லும் போது உங்கள் அலைபேசியை விட்டுவிட்டு செல்லுதல் என்பது (உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் அறிந்தே இருக்காத இந்த அலைபேசிகளை) இப்போதெல்லாம் உங்களை குழப்பிவிடும்...
திரும்ப எடுப்பதற்காக பாதிவழியிலிருந்து வீட்டுக்குத் திரும்பி செல்வீர்கள்...



10. காலையில் நித்திரையிலிருந்து எழும்பி காலைத் தேநீரை அருந்த முன்னர் ஒருமுறை தொடரறாநிலைக்கு சென்று வலைத்தளங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவீர்கள்...


11. இப்போது உங்கள் தலையை ஆட்டி ஆட்டி மெல்லமாக புன்னகைப்பீர்கள்...


12. மேலே உள்ளதை வாசித்ததும் பெரிதாக சிரிப்பீர்கள்...


13. எல்லாவற்றையும் விட கொடுமையாக இந்தப் பதிவை யாருக்காவது முன்னகர்த்த விரும்புவீர்கள்...


14. மேலே இலக்கங்கள் இட்டதில் 9ம் இலக்கம் தவறவிடப்பட்டமையை கவனிக்காமலிருக்குமளவிற்கு நீங்கள் வேலைப்பழுவாக இருப்பீர்கள்...


15. அதை வாசித்த பின்னர் மேலே சென்று 9ம் இலக்கம் இல்லைதானா என்பதை உறுதிப்படுத்தியிருப்பீர்கள்...


இப்போது நீங்கள் சிரிக்கிறீர்கள்....

இப்போது அறிந்து கொண்டீர்களா நீங்கள் 2009ம் ஆண்டில் வசிக்கிறீர்கள் என்று....

(தமிழிஷ் வாக்களிப்புப் பட்டை இட்டிருக்கிறேன்... யாழ்தேவி வாக்களிப்புப் பட்டை முன்பு முதலே இருக்கிறது... பிடித்திருந்தால் வாக்களியுங்கள்...

அப்படியே 'பின்தொடர்பவர்கள் விட்ஜெற்றை' கஷ்ரப்பட்டு html குறிகள் தேடி எடுத்து இட்டிருக்கிறேன்... எனக்கு பின்தொடர்பவர்கள் விட்ஜெற் வழங்கப்பட்டிருக்கவில்லை...
எனவே பின்தொடர விரும்பினால் பின்தொடருங்கள்...)

ஊடகங்களில் வெளியான அறிக்கைகளுக்கு புறம்பாக யுனிஸ்கானின் பதவி விலகலுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.
பதவி விலகலுக்கு காரணமான வெவ்வேறு வகைகள்...

தாஸ்ரியின் வேர்ஷன் (Dasti's Version): பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினரான தாஸ்ரி (அல்லது தஸ்ரி) இந்த மாதம் ஒக்ரோபர் என்பதை மறந்து ஏப்ரல் மாதம் எனவும் அவர் அறிக்கை வெளியிட்ட நாள் ஏப்ரல் முதலாம் திகதி எனவும் நினைத்துவிட்டார்.
அதனால் தான் ஆட்ட நிர்ணயசதி மற்றும் வேண்டுமென்றே தோற்றமை குறித்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
அரையிறுதியில் பாகிஸ்தானின் தோல்வியால் கவலையடைந்திருந்த பாகிஸ்தான் மக்களை ஏப்ரல் முட்டாள் நகைச்சுவை சொல்லி அவர்களைத் தேற்ற வந்த அவரின் நல்ல மனதை புரிந்து கொள்ளவில்லை.
அவர் அந்தத் திகதியை ஏப்ரல் முதலாம் திகதி என நினைக்க காரணம் இருக்கிறது.
ஏனென்றால் இஜாஸ் பட் இன் பிறந்த தினம் ஒக்ரோபர் மாதத்திலேயே வருவதால் இரண்டையும் முடிச்சுப் போட்டு முட்டாள் தினம் என்பதால் ஏப்ரல் முதலாம் திகதி என நினைத்துவிட்டார்.


யனிஸ் கான் வேர்ஷன்: யுனிஸ்கான் நினைத்தார் இந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களில் எதுவும் இல்லை என்று. ஏனென்றால் ஆட்டங்கள் யாவும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு இருப்பவை தானே. போதிய ஏற்பாடுகளை செய்வதற்காக முன்னரே ஆட்டங்களின் திகதிகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம் தானே. இதில் என்ன இருக்கிறது என விட்டுவிட்டார்.
அதே வேளை தனது திருமண நிறைவுநாள் வருவதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இரண்டுநாள் விடுமுறை கேட்டு விடுமுறைக் கோரிக்கை கடிதத்தை (leave letter) இஜாஸ் பட் இடம் கையளித்தார்.
அந்தக் கடிதத்தை ஊடகங்கள் தான் இராஜினாமாக் கடிதம் என வதந்தியாக மாற்றிவிட்டன.
இஜாஸ் பட் உம் ஷகிட் அப்ரிடியை அணித்தலைவராக்க விரும்பியதால் இராஜினாமாக் கடிதம் எனக் கதையை மாற்றிவிட்டார்.
இதற்கெதிராக தனது கையை உயர்த்த யுனிஸ் கான் விரும்பினாலும் அவரது விரலில் முறிவு இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை.


திரு.இஜாஸ் பட் இன் வேர்ஷன் : Mr.Butt இன் பெற்றோர்கள் இதைவிட சிறந்த பெயரை அவருக்கு வைத்திருக்க முடியாது. (ஆங்கிலத்தில் எழுதியமையை கவனிக்க.) ஏனென்றால் அணியை மீள கட்டமைக்கும் காலப்பகுதியில் அணி பெற்றுத் தந்த அற்புதமான வெற்றிகளையும், முடிவுகளையும் சிதைத்த இவருக்கு இதைவிட சிறந்த பெயர் வேண்டுமா.
எல்லாவற்றுக்கும் இந்தியாவை நோக்கி விரலைக் காட்டுவதை விட்டுவிட்டு தனது வேலையை தான் ஒழுங்காக செய்திருந்தால் இவையெதுவும் நடந்திருக்காது. அணித்தலைவர் இல்லாமல் அணியைப் பற்றியும், அணியின் பெறுபேறுகளையும் பற்றி அணி வீரர்களோடு அதுவும் முட்டாள், பக்கச்சார்பான ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க இவர் எடுத்த முயற்சிகள் வாசிப்பதற்கும், கேட்பதற்கும் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் தருகின்றன.


பாகிஸ்தான் இரசிகர்களது வேர்ஷன்: அதிகாரிகளாலும், ஊடகங்களாலும் செய்திகள் பரப்பப்பட்டு இவை நடப்பவை எமக்கொன்றும் புதிதில்லை. இதில் நல்ல விடயம் என்னவென்றால் இந்தக் கொடுமைகள் ஏற்கனவே பலமுறை நடந்திருப்பதாலும் அணிவீரர்கள் இதற்கு பழகிவிட்டார்கள் என்பதும் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் அணியானது மைதானத்தில் சிறப்பாக ஆடும் என்பதும் (குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக) அனைவரும் அறிந்ததே. அணி நிர்வாகத்தை நடத்த இம்ரான் கானை மறுபடியும் கொண்டுவாருங்கள்...


இங்கிலாந்து இரசிகர்களது வேர்ஷன்: கடவுளே! கெவின் பீற்றர்னை கடுப்பாக்குவதற்கு அவரின் முன்னால் வேறு ஒருவரை புகழ்வதற்கு எமக்கு யாருமே இல்லை. அதனால் தான் மைக் ஆதர்ற்றனை உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என வர்ணித்தோம்.
பாகிஸ்தானில் ஏராளமான திறமைகள் இருக்கின்றன, அத்தோடு சர்ச்சைகளும் இருக்கின்றன.
பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரிரண்டு வீரர்களை கொத்திக் கொண்டு போய் எமது இங்கிலாந்து நாட்டு வீரர்களுக்கு பதிலாக விளையாடினால் இங்கிலாந்து நாட்டைச் சேராத இங்கிலாந்து அணியொன்றை கட்டியெழுப்பும் எங்கள் கனவு மெய்ப்படும்.


குறிப்பு: இது என்னுடைய சொந்த ஆக்கமல்ல. ஆங்கிலத்தில் நண்பரொருவர் எழுதிய ஆக்கத்தில் தமிழ் வடிவமே இது.
தன்னுடைய ஆக்கத்தை மொழிமாற்றம் செய்து என்னுடைய தளத்தில் வெளியிட அனுமதி தந்த இந்தியாவைச் சேர்ந்த நண்பர் ரமேஷ் இற்கு நன்றிகள் பல.

****************************************************************************

அப்படியே.... இன்று தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவுருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

கடந்த செவ்வாய்க்கிழமை அவசரமாக வவுனியாவிற்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. திடீர் விஜயம் என்பதால் பதிவொன்றை இட்டுவிட்டுப் போகவும் முடியவில்லை.
கொஞ்சம் பின்னூட்டங்களும் வந்திருந்தன. பதிலளிக்கவும் முடியவில்லை.

முன்பைய வவுனியா வீடு வவுனியா நகரத்திற்கு அண்மையில் (காமினி மகா வித்தியாலயத்திற்கு 200, 300 மீற்றர்கள் அருகில் என்று சொல்லலாம்.) தான் இருந்தது. அந்த வீட்டிற்கு 100 மீற்றர்கள் தூரத்தில் ஒரு இணைய மேயும் இடம் இருந்தது.
ஆனால் இப்போதைய புதிய வீடு தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இருக்கிறது. அந்தப் பிரதேசத்தில் இணைய மேயும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் களைத்துவிட்டேன்.
கடைசியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டு அங்கே போய் உட்கார்ந்தால் அது உலகத்தில் மிகவும் வேகமான கணணியாகவும், இணைய இணைப்பாகவும் இருந்தது. ஒன்றும் செய்ய முடியாமல் வந்துவிட்டேன்.
அப்போது தான் யாழ்தேவி திரட்டி 'தினக்குரல்' பத்திரிகை மற்றும் 'இருக்கிறம்' சஞ்சிகைகளோடு ஒன்று சேர்ந்து பதிவர்களின் படைப்புக்களை முன்னேற்றுவதற்கு எடுத்த முயற்சியை அறிந்து கொண்டேன்.
அத்தோடு யாழ்தேவி நிர்வாகக் குழுவில் வந்தியத்தேவன் அண்ணா இருப்பதாக அறிந்து கொண்டேன். யாழ்தேவி அறிக்கையை வந்தியத்தேவன் அண்ணா தான் விடுத்திருந்தார்.
ஆகவே வந்தியத்தேவன் அண்ணாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
யாழ்தேவியின் பணி தொடரட்டும்.

வவுனியாவில் சொல்லுமளவிற்கு எதுவும் இல்லை.
சென்ற முறை காமினி மகாவித்தியாலய அகதி முகாம்களை அல்லது நலன்புரி முகாம்களை காண முடிந்தது. இம்முறை அந்தப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை.

*************************************************

அத்தோடு ஒரு செய்தியையும் அறியக்கிடைத்தது.
இலங்கையின் அதிகாரத் தலைநகராக அம்பாந்தோட்டை (ஹம்பாந்தோட்ட) விரைவில் தெரிவாகும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஓர் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். வணிகத்தலைநகராக கொழும்பு தொடர்ந்து செயற்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இது எதிர்பார்க்கப்பட்டது என்பதால் பெரிய விடயமாகத் தெரியவில்லை.

'மன்னர் எங்கிருக்கிறாரோ அங்கு தான் அவரின் அரண்மனையும் இருக்கும். அரண்மனை இருக்குமிடத்தில் தான் அரச சபையும் இருக்கும்' என ஐந்தாம் ஆண்டு கதைப்புத்தகத்தில் இருந்தது. இதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை இந்தச் செய்தியை அறியும்வரை.


*************************************************
விசிறி வேலை செய்யாத புகையிரதத்தை அனுப்பிய இலங்கை புகையிரதத் திணைக்களம் ஒழிக...
நான் கொழும்புக்கு திரும்பி வரும் போது வந்த புகையிரதத்தில் மின்விசிறி தொழிற்படவில்லை.
இலங்கையில் எல்லாமே இப்படித் தானோ...!

*************************************************

தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் பதிவு செல்கிறது என யோசிக்க வேண்டாம்.
வவுனியாவிற்குச் செல்வதற்கு முன்னர் சவரம் செய்யலாம் என சவர சாதனத்தை (ஷேவிங் றேசர் என்பதன் தமிழ் என்ன?) தேடியால் அதைக் காணவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேடியும் கிடைக்கவில்லை.
அதனால் தாடியோடு (உனக்கெங்கடா தாடி என்று இந்தப் பச்சைக்குழந்தையை அவமானப்படுத்த விரும்புவர்களுக்கு ஓர் செய்தி. அது ஒட்டுத் தாடி என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இறுக்கமாக ஒட்டிக் கொண்டுவிட்டதால் கழற்ற முடியவில்லை. எனவே ஷேவ் செய்ய வேண்டி ஏற்பட்டது.) வவுனியாவிற்குப் போக வேண்டி ஏற்பட்டது.
பின்னர் வவுனியாவிற்குப் போய் அங்கே ஓர் ஷேவிங் றேசர் வாங்கி ஷேவ் செய்தேன்.
எனவே தான்,
தாடியோடு வவுனியாவிற்குப் போய் தாடியில்லாமல் கொழும்பிற்கு வந்த கதை என்றேன்.

இனி தொடர்ந்து பதிவிட எதிர்பார்க்கிறேன்.

(தலைப்பைப் பார்த்துவிட்டு உள்குத்துகள் இருக்குமென எதிர்பார்த்து வந்தவர்கள் என்னைக் கும்மியெடுக்க இத்தால் அனுமதி வழங்கப்படுகிறது.)

Image Hosted by ImageShack.us



பொறியியலாளர் எவ்வாறு தற்கொலை செய்வார்?
Image Hosted by ImageShack.us



இரட்டை நாக்குக்காரர் எண்டுவாங்களே... அது இத தானா?
Image Hosted by ImageShack.us



புகைப்படப் பிடிப்பாளர் எண்டா இப்பிடி பொறுமையா இருக்கோணும்...
Image Hosted by ImageShack.us



சும்மா.... மேலதிகமா... அழகான நாய்...
Image Hosted by ImageShack.us

மனிதர்களுக்கு ஆறறிவு, பகுத்தறிவு என நாம் மார்தட்டிக் கொண்டாலும் எமக்கு சிந்திக்கும் திறன் குறைவு தான்...
நாமெல்லாம் சீரியஸாக மொக்கை போடும் இனம்...

கீழே சில சந்தர்ப்பங்களில் நாம் விடைகள் தெளிவாகத் தெரிந்த வினாக்களை எவ்வாறு கேட்கிறோம் எனப் பாருங்கள்.
அந்த வினாக்களுக்கு இப்படியான விடைகள் கிடைக்கவில்லை என மகிழ்ச்சியாக இருங்கள்.


1. திரையரங்கில்: திரையரங்கில் நீங்கள் உங்கள் நண்பன் அல்லது தெரிந்தவரைக் காணும் போது..

முட்டாள்தனமான கேள்வி: மச்சான்... நீ இங்க என்னடா செய்யிறாய்?
விடை: உனக்குத் தெரியாதா? நான் இங்க கறுப்புச் சந்தையில (Black இல) ரிக்கெற் விக்கிறன்.



2. பேருந்தில்: நெரிசல் மிக்க பேருந்தில், உயர்ந்த குதி கொண்ட செருப்பணிந்த பருமனான பெண்மணி ஒருவர் உங்கள் காலை மிதித்துவிடுகிறார்.

முட்டாள்தனமான கேள்வி: மன்னிக்கவும். காயப்படுத்தி விட்டதா?
விடை: இல்லை. இல்லவே இல்லை. நான் இப்போது மயக்கத்தில் இருக்கிறேன். வேண்டுமானால் இன்னுமொருமுறை மிதித்துப் பாருங்களேன்?



3. இறந்த வீட்டில்: இறந்தவருக்கு நெருங்கிய ஒருவர் அழுதவாறே...

முட்டாள்தனமான கேள்வி: ஏன்? ஏன்? ஏன் இவர்? மற்றவங்க எல்லாரையும் விட்டிற்று ஏன் இவரை மட்டும்?
விடை: ஏன்? அவருக்கு பதிலா நீங்க (மேல) போக விரும்பிறீங்களா?



4. உணவகத்தில்: உணவகத்தில் நீங்கள் உணவு பரிமாறுபவரிடம்...

முட்டாள்தனமான கேள்வி: மசாலாத் தோசை நல்லமா?
விடை: இல்லை. அது கூடாது. கூடவே கூடாது. அதுக்குள்ள நாங்கள் கல்லு, மண் எல்லாம் கலந்து செய்யிறனாங்கள். அடிக்கடி துப்பவும் செய்வம்.



5. குடும்ப ஒன்றுகூடலில்: நீண்ட காலத்தின் பின்னர் உங்களைக் காணும் அன்ரிமார்...

முட்டாள்தனமான கேள்வி: ஹேய் கோபி... நீ இப்ப பெரியாளா வந்திற்றாய்...
விடை: நல்லது. ஆனா நீங்க சொல்லிக் கொள்ற அளவுக்கு மெல்லிசா மாறேல.



6. திருமணம்: உங்கள் நண்பியொருத்தி தனது திருமணம் பற்றி உங்களுக்கு அறிவிக்கும் போது நீங்கள்...

முட்டாள்தனமான கேள்வி: நீ கலியாணம் முடிக்கப்போற பெடியன் நல்லவனா?
விடை: இல்ல. அவன் மனுசிய அடிக்கிற ரகம். உணர்வுகளற்ற ஜடம். குடிகாரன். எல்லாம் சும்மா காசுக்காகத் தான்...



7. தொலைபேசி: நடு இரவில் நித்திரை செய்துகொண்டிருக்கும் போது அழைப்பு வருகிறது... மறுமுனையில்...

முட்டாள்தனமான கேள்வி: மன்னிக்கவும். நித்திரை செய்து கொண்டிருந்தீங்களா?
விடை: சீ, இல்லை. ஒபாமான்ர சுகாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் சரியா எண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன். நான் நித்திரை எண்டா நீ நினைச்சாய்? நீ ஒரு முட்டாள்.



8. தலைமுடி: உங்கள் நண்பனொருவன் தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டுவருகிறான்...

முட்டாள்தனமான கேள்வி: ஹேய்... தலைமயிர் வெட்டியிருக்கிறாய் போல?
விடை: சீ.. இப்ப இலையுதிர்காலம் தானே? அதுதான் உதிர்க்கிறன்.



9. பல்வைத்தியர்: பல்வைத்தியர் உங்களைப் பரிசோதிக்கும் போது வாயில் தட்டி, அடித்துப் பார்க்கிறார்.

முட்டாள்தனமாக கேள்வி: நோகுதா எண்டு சொல்லுங்கோ...
விடை: இல்லை. அது நோகாது. அடியுங்கோ. இரத்தம் தான் கொஞ்சம் வரும்.



10. புகைத்தல்: நீங்கள் வீதியில் சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓர் அழகான பெண்மணி வருகிறார்.

முட்டாள்தனமான கேள்வி: ஒ! நீ புகைக்கிறனியா?
விடை: கடவுளே... என்ன அதிசயம்... இது ஒரு துண்டு வெண்கட்டி(Chalk). இப்ப என்னடாவெண்டா நுனியில புகையுது... என்ன அதிசயம்...

*************************************************************************************

யாழ்தேவின் நட்சத்திர வாரம் இன்றோடு நிறைவடைகிறது.
என்னை நட்சத்திரமாக தெரிவுசெய்தமைக்கு யாழ்தேவி திரட்டிக்கு எனது நன்றிகள்.
அப்படியே யாழ்தேவி திரட்டியில் இதுவரை தங்களை இணைத்துக் கொள்ளாத தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் இருப்பின் அவர்களை யாழ்தேவியில் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் யாழ்தேவிக்கு எனது நன்றிகள்.

இந்த நட்சத்திர வாரக் காலப்பகுதியில் ஒரு சிந்தனைப் பதிவும் (சீரியஸ் பதிவு), ஒரு தொடர் பதிவும் போட்டுவிட்டேன்.
சிந்தனைப்பதிவு போட்டு நொந்து போனதால் (ஒரு ஈ, காக்கா கூட என் வலைப்பதிவுப் பக்கம் வரேல) 'சீரியஸ் பதிவு பொட்டு நொந்து போனோர் சங்கத்தில்' கெளரவ உறுப்பினராக சேர்ந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறேன்.

பதிவர் சுபாங்கன் என்னை அழகு, காதல், பணம், கடவுள் என்ற தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.
எனக்கு உண்மையிலேயே என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
ஆனால் தந்த அழைப்பிற்காக எழுத வேண்டுமே... அது தான்...


அழகு....


எல்லாமே அழகு தான்...
என்னைப் பொறுத்தவரை நான் விரும்பும் எல்லாமே அழகு தான்.
ஐஸ்வர்யாராஜ் அல்லது ஏனைய உலக அழகிகள், உலக அழகர்கள் எனக்கு அழகாகத் தெரியமாட்டார்கள்... ஆனால் இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட, மற்றவர்கள் அழகில்லை என நினைக்கும் ஒருவர் எனக்கு பேரழகியாக, பேரழகனாகத் தெரிவர்...
எல்லாவற்றையும் விட நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் எவருமே எனக்கு பேரழகர்கள், பேரழகிகள் தான்...
யாரையும் இதுவரை அழகன், அழகி என்ற பார்வையில் வேறுபடுத்தியது கிடையாது. இனிமேலும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.
அழகு எங்குமில்லை, அன்பில் தான் இருக்கிறது.
சிறுகுழந்தை பொதுவாக எல்லோருக்கும் அழகாகவே தெரிகிறது. அது ஏன்?
ஏனென்றால் அந்தக் குழந்தையை நீங்கள் எதிரியாக நினைப்பதில்லை, அந்தக் குழந்தையிடம் கெட்ட பழக்கங்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே அந்த எண்ணம் தானாகவே அன்பை ஏற்படுத்துகிறது. அந்த அன்பு உங்களை அந்தக் குழந்தையை அழகாகக் காட்டுகிறது.
வளர்ந்த பின்னர் ஒவ்வொருவரும் பிழை செய்ய ஆரம்பிக்கும் போது அந்தப் பிழைகள் எம் கண்முன்னே வருவதால் சிலர் அழகில்லாமற் தெரிகிறார்கள்.
அன்னை தெரேசாவின் முகத்தை உற்றுப் பாருங்கள்... பேரழகியாத் தெரிவார்.



காதல்...



பச்சிளம் குழந்தையிற்ற கேக்கிற கேள்வியா இது?
சரி சரி...
முட்டாளை அறிஞனாக்கும், அறிவாளியை முட்டாளாக்கும் என்று சொல்வார்கள்.
புற அழகில் வரும் காதலை விட உண்மையான அன்பில் வரும் காதல் மேல் நம்பிக்கையுள்ளவன்.
(இது பயங்கர சுயநலம்... ஏனென்டா அழக பாத்து காதலிக்கிறது எண்டா என்னயெலல்லாம் யாரும் காதலிக்க மாட்டாங்க தானே? ;) )



காதலர்கள் பொய்யர்களாக இருந்தாலும், காதல்கள் பொய்யாக அமையாது என்பது எனது நம்பிக்கை.
காதல் இல்லாமல் இங்கு யாரும் இல்லை என்பேன். சிலர் வெளிப்படுத்திக் கொள்வார்கள். பலர் வெளிப்படுத்துவதில்லை.
எனக்குக் காதல் பிடிக்கும். அந்த உணர்வு பிடிக்கும். அது ஏற்படுத்தும் இன்ப வலி பிடிக்கும்.
சில இடங்களில் நிஜவலிகளும் ஏற்படுவதுண்டு.
நடக்க ஆரம்பிக்கும் போது தான் விழுவேன் எனக் குழந்தைக்கு தெரிவதில்லை.
காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும் அது வலிகளையும் தரும் என்பதும் புரிவதில்லை.



'உன்னை மறக்க நினைக்கிறேன், நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன், உன் முகம் என் கண்முன்னே வருகிறது இரண்டையும் மறக்க நினைக்கிறேன்... மரணம் கண்முன்னே வருகிறது...'


இது நான் எழுதிய வரிகள்... (கவிதை எண்டு சொன்னா எங்க கவிதய காணேல எண்டு மொக்கை போடுவீங்க தானே? அது தான்)


'உன்னுள் என்னை நான் தொலைத்தேன்...
நீ அருகே இல்லாதபோது என்னைக் கண்டுபிடித்தேன், மறுபடி தொலைக்கும் ஆசையில்'





பணம்...




பணமின்றி வாழ்க்கையில்லை...
ஆனால் பணமே வாழக்கையில்லை...
அடிக்கடி எனக்கு நானே, சிலவேளைகளில் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொல்லும் வரிகள் இவை.
(Money is a must for life, but money isn't the life)


வீட்டில் அடிக்கடி நகைச்சுவையாக 'காசென்ன காசு... இண்டைக்கு வரும்.. நாளைக்கு போகும்' என்று சொல்லிக் கொள்வேள்.
ஆனால் பணமின்றி எதுவுமே இல்லை என்பது எனக்குத் தெரியும்.
பணத்தை நோக்கியே உலகம் அசைகிறது.
இன்னொருவரின் இரத்தத்தைக் குடிக்காத, இன்னொருவரின் கண்ணீரோடு வராத பணம் என்றென்றும் எனக்கு வேண்டும்.



கடவுள்...



கடவுள்...!!! இதுவரை கண்டதில்லை என்கிறார்கள் பலர். ஆனால் பலமுறை கண்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன்...
மக்கள் கஷ்ரப்படும் போது அவர்களுக்கு உதவும் எல்லோருமே கடவுளர்கள் தான்.
ஆனால் மதங்களையும், வழிபாடுகளையும் வெறுக்கிறேன்.
மதங்கள் இல்லாவில் இந்தியாவில் ஏன் அடிக்கடி கலவரங்கள் ஏற்படப்போகிறது?
மதங்கள் வேண்டாம். கோவில்கள் வேண்டாம்.
மனிதம் மட்டும் போதும்.
உணராத ஒருவிடயத்திற்காக நம்மிடையே சண்டைகள் வேண்டாம்.
எனக்கு மேல் உள்ள சக்தியை நம்புகிறேன். அதைத் தான் கடவுள் என்கிறார்கள். ஆனால் மதங்களை நம்பவில்லை, வெறுக்கிறேன்...
ஒரு மதத்தில் சரியென்று சொல்லப்படுகின்ற விடயம் இன்னொரு மதத்தில் பிழையெனப்படுகிறது.
ஆகவே எங்கேயோ பிழை இருக்கிறதல்லவா...???
(திரும்பவும் மதங்கள் தொடர்பான வாதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.)

**************************************************************************


இப்போது தான் எனக்கு மகிழ்ச்சி...
இன்னொருவரை மாட்டிவிடுவதில் என்ன ஒரு மகிழ்ச்சி...
எனக்குத் தெரிந்தவரை பொதுவாக எல்லோரும் எழுதிவிட்டார்கள்.
எனக்கு யாரை அழைப்பது என்று தெரியவில்லை...

மீண்டும் நண்பன் இலங்கனை அழைக்கிறேன்...
நண்பர் Thevash ஐ அழைக்கிறேன். -இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரை குழுமத்தோடு இப்படியான வகையில் சேர்த்தால் அவரின் எழுத்துக்கள் மேலும் வெளிவர உதவும் என நம்புகிறேன். நண்பரே வாருங்கள்.
நண்பர் இறக்குவானை நிர்ஷனை அழைக்கிறேன் - புதிய மலையகம் என்ற இவரது சமூக சீர்திருத்த எழுத்துக்களை இரசிக்கிறேன். நண்பரே வாருங்கள்.
சகோதரி தர்ஷாயினி - ஒப்பீட்டளவில் புதியவர். (நானெல்லாம் 1 வருஷத்துக்கு மெல இருந்து குப்பை கொட்டுறன். என்னோட ஒப்பிட்டா புதியவர் எண்டு சொல்ல வந்தன்.) அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர். அன்புடன் அழைக்கிறேன்.

அழைத்த இரு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்த தொடர் பதிவை மேலும் விரிவுபடுத்துங்கள்.
உங்கள் நண்பர்களை, நீங்கள் படிக்கும் பதிவர்களை தொடர அழையுங்கள்.

குறிப்பு: நண்பர் யோ வொய்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் தான் முதலில் பிடிக்கும் பிடிக்கும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தீர்கள். ஆனால் ஏதோ குழப்பத்தில் அழகு, காதல், பணம், கடவுள் தொடர்பதிவை முதலில் வந்ததென நினைத்து எழுதிவிட்டேன்.
உங்கள் தொடர்பதிவை விரைவில் பதிவிடுகிறேன்...

***********************************************************************

நிறைய நாட்களுக்கு முன்னர் வந்தியத்தேவன் அண்ணா என்னை ஊக்கப்படுத்தி விருதொன்றை தந்தார். அவர் தந்து சில நாட்களின் பின்னர் சகோதரர் சதீஷ் அவர்களும் அதே விருதை தந்திருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



நானும் இதை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று கிளம்பிற்றன்...
ஆனால் விருது வழங்குபவர் தனக்கு தகுதியில்லாம விருது கொடுக்க வெளிக்கிட்டா பிறகு அண்மைய தமிழக அரசின் சினிமா விருதுகள் போலாகிவிடும் என்பதால் விருது என்ற வார்த்தையை பரிசு என மாற்றிக் கொள்கிறேன்.
என் சார்பான அன்புப் பரிசை கீழ்வரும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே...

இறக்குவானை நிர்ஷன் - படிக்கத் தொடங்கி குறுகிய காலத்தில் வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது இவரது எழுத்துக்கள். மலையகம் பற்றிய இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு என் அன்புப் பரிசு.
நண்பர் இலங்கன் - ஒரே வகுப்பில் படித்திருந்தாலும் இருவரும் எழுதுவது மற்றொருவருக்கு தெரியாமலேயே எழுதிக் கொண்டிருந்தோம் சில காலங்கள். அருமையான நகைச்சுவையாளன். அவரை வாழ்த்தி எனது அன்புப் பரிசு.
நண்பர் தேவேஷ் - புதியவர். கனடாவிலிருந்து பதிவிடுகிறார் என நம்புகிறேன். நண்பரின் கவிதைகளும், ஏனைய ஆக்கங்களும் மென்மேலும் வெளிவர அவரிடம் வேண்டிக் கொண்டு அவருக்கு என் அன்புப்பரிசு.

நண்பர்களே உங்கள் எல்லோருடைய எழுத்துக்களையும் இரசிக்கிறேன். நான் மற்றவர்களுக்கு அன்புப்பரிசு வழங்கவில்லை என்பதால் உங்கள் எழுத்துக்களை இரசிக்கவில்லை என்று அர்த்தப்படாது. மற்றவர்கள் பொதுவாக ஏற்கனவே விருது பெற்றுவிட்டார்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் எப்போதெல்லாம் கவலையாகவே உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்ற காரணத்தை அறிந்து ஓர் கோட்பாட்டை, கருதுகோளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் வருகிறது. உண்மையான காரணத்தை அறியாமல் நீங்களே உங்கள் கவலைக்கான காரணத்தை புதிதாக உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களால் புதிதான காரணங்களை உருவாக்கும் போதெல்லாம், உங்கள் திருமண நிலைமை, உங்கள் எதிர்காலம், உட்பட எல்லாம் போகப் போக சரிவரும் என்ற பொய்மையான நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையாகப் பார்த்தீர்களானால் நிச்சயமாக யதார்த்தத்தில் இது உண்மையன்று. உங்கள் மனநிலைமை சொல்லுகின்ற 'எல்லாம் சரிவரும், எப்போதென்றால்...' என்பது மேலும் முன்நிபந்தனைகளை விதிக்கிறது. இந்த முன்நிபந்தனைகளாவன மிகவிரைவில் தீர்க்கப்படவேண்டும், அப்போது தான் நீங்கள் விரும்பிய எல்லாமே சரிவரும்.
இதுவரையில் எண்ணிலடங்காத தடவைகள் நீங்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளை, இதுவரையில் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள். நினைத்துப் பார்த்து உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவது உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உணர்ந்தால் நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறீர்கள். நீங்கள் பட்டம் பெற விரும்பினீர்கள், பெற்றீர்கள். நீங்கள் நண்பனொருவனை வேண்டினீர்கள், கிடைத்தார். நீங்கள் ஓர் செல்லப்பிராணியை வேண்டி நின்றீர்கள், கிடைத்தது. நீங்கள் பணம் வேண்டினீர்கள், கிடைத்தது. அப்படியே செல்கிறது... பல்லாயிரம் தடவைகள் நீங்கள் உங்கள் வாழ்வில் வேண்டிவை யாவும் கிடைத்திருக்கின்றன. இருந்தும் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை.

அதற்குரிய தீர்வு என்னவென்றால்,இவ்வளவு காலமும் அனுபவித்த வலிகளுக்குரிய காரணம் உங்கள் சொந்த சிந்தனைகள் தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய பணிவு உங்களுக்கு ஏற்பட வேண்டும்.
கவலைப்படாதீர்கள்; அனேகமாக ஒவ்வொருமே இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற நல்ல செய்தி என்னவென்றால், இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை இதைவிட சிறந்த பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும். எவ்வளவு மோசமாக நீங்கள் மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்பதற்கு சம்பந்தமில்லாமல் அல்லது எவ்வளவு காலமாக நீங்கள் மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்பதற்கு சம்பந்தமில்லாமல், எந்தக் கணம் உங்கள் சிந்தனைகள் தான் உங்கள் மனவழுத்தத்திற்கு காரணம் என்பதை உணர்கிறீர்களோ அந்தக் கணத்தில் நீங்கள் சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்க தொடங்கிவிடுவீர்கள்...

(நேற்று சிறிது குழப்பத்திலிருந்த பொழுது Richard Carlson என்பார் எழுதிய Stop thinking and Start Living என்ற புத்தகத்தின் ஓர் பகுதி கிடைத்தது. அதிலிருப்பது உண்மை எனப்பட்டது. சரியான தகவல்கள் என என் மனம் சொல்லியது. எனவே நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற ரீதியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மொழிமாற்றத்தில் ஏதாவது தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்னால் இயன்றவரை சரியாக மொழிமாற்றம் செய்ய முயற்சித்தேன்.)

*************************************************************


சிறிய சொற்களில் மகிழ்ச்சி...

நீங்கள் செயல்களைச் செய்யும் பொதே தூண்டுதலை பெறுகிறீர்கள், செயல்களைப் பற்றி சிந்திக்கும் போதல்ல.

அடுத்த முறை நீங்கள் குழப்பத்தில் இருக்கும் போது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், நபர்கள் பெரும்பாலும் உங்களைக் கோபப் படுத்தவதில்லை, அவர்கள் பற்றிய சிந்தனைகளை அதைச் செய்கின்றன.

என்ன சிந்தனைகள் உங்களுக்கு வலியை ஏற்படுத்தினாலும், அவை சிந்தனைகள் மட்டுமே. சிந்தனைகளை மாற்ற உங்களால் முடியும்.

நாம் ஒருவரை மன்னிக்காவிட்டால் அவர் வருந்துவார் என்பதை எங்கே நாம் அறிந்து கொண்டோம்.?

பயத்தை வெல்வதற்குரிய ஒரே வழி, அதை எதிர்கொள்வது தான்.

நமக்கு நாமே நேர்மையாக இருந்து கடந்த காலங்களில் நமக்கு நடந்தவற்றை பட்டியலிட்டால், அவை நடைபெற, ஏற்பட நாம் எவ்வாறு உதவினோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மகிழ்ச்சிகரமாக வாழும் மக்கள் வாழ்க்கை நன்றாக இருக்கின்றதா அல்லது அப்படியில்லையா என்பதைப் பற்றி அதிகம் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையை வாழ்வார்கள்.

உங்கள் மனதில் மகிழ்ச்சி வேண்டுமானால், நடைபெறும் சம்பவங்களை நல்லது கெட்டது என பட்டியல்படுத்துவதை நிறுத்துங்கள்.

நீங்கள் உங்களால் முடிந்த சிறந்ததை செய்ய வேண்டும். இது மற்றவர்களை கவர்வதற்காக அல்ல, உங்களால் முடிந்தளவு சிறப்பாக செயற்படும் போது தான் உங்களால் உங்கள் வேலையை மகிழ்ச்சிகரமாக செய்ய முடியும்.

வாழ்க்கை சுவையானதாக இருக்கும் போது, 'இது நிலைக்காது' என உங்கள் உள்மனம் சொல்லும் போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், 'ஆம். நிலைக்காது. இதைவிட சுவையாக அமையும்.

(Andrew Matthews என்பவரால் எழுதப்பட்ட Happiness in a Nutshell என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டது)


***********************************************************************************

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு எப்போதும் பதிலளிப்பவன் அல்லன் நான். என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது என விட்டுவிடுவேன்.
எனினும் கடந்த சில நாட்களாக என்னை தனிப்பட்ட ரீதியில் விமர்சித்து ஒரு சில சகோதரர்கள் செயற்படுவது வருந்தத்தக்கது.
என்னை விமர்சிக்கிறார்கள் என்பதை சொல்லி நான் பிரபலமானவன் என்று பொய்யை ஏற்படுத்தவில்லை.
ஆனால் என் கருத்தை ஏற்றுக் கொள்ளாத இருவர் என்னை விமர்சித்திருந்தார்கள்.
அவர்களுக்கு என் வேண்டுகோள், ஒருவரது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அந்தக் கருத்தை விமர்சியுங்கள், அந்த நபரை அல்ல.

Facebook இல் 'வேலையில்லாத பதிவர்கள் சிலர் பிரபலத்திற்காக பதிவிடுகிறார்கள்' என்று ஒரு நண்பர் தெரிவித்திருந்தார்.
பதிவொன்றில் இன்னொரு நண்பர் தொடர்ந்து என்னை விமர்சித்து வருகிறார்.

ஒருவர் Stat counter தனது தளத்தில் போட்டிருக்கிறார் என்றால் அவர் hits களை எதிர்பார்த்துத் தான் பதிவிடுகிறார் என கருத்தாகுமா?
என்னைப் பொறுத்தவரை எனது பதிவுகள் பலரையும் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் பலரையும் குழப்பி அல்லது சர்ச்சைகளால் எனது கருத்துக்கள், பதிவுகள் சென்றடைய வேண்டும் என நான் எப்போதும் விரும்பியதில்லை.
சுருக்கமாக சொல்லப் போனால், hits கிடைப்பது எனக்கு மகிழ்ச்சி, ஆனால் hits இற்காக எழுதுபவனில்லை நான், எழுத விரும்புவதும் இல்லை.
hits இன் மூலம் எனது பதிவுகளை பார்ப்பவர்களை, எனது பதிவு எவ்வளவிற்கு சென்றடைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறேன்.
இதற்குப் பின்னால் என்னை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க விரும்பினால் எனது மின்னஞ்சலான kanagagopi@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் விமர்சனங்களை அனுப்புங்கள். வாசித்து சிரித்து விட்டு இருக்கிறேன்.
என்னை விமர்சித்து, அதற்கு நான் பதிலளித்து சர்ச்சைகளை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலமடைய எண்ணும் திட்டங்களை கைவிடுங்கள்.
இப்போதும் சொல்கிறேன், விமர்சித்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் அளவிற்கு நான் பிரபலமானவன் கிடையாது.

ஒரு மனிதன் தன் மனைவியைக் காணவில்லை என்பதை முறையிட காவல்துறை அலுவலகத்திற்கு சென்றான்.

நபர்: எனது மனைவியைக் காணவில்லை.

காவல்துறை அதிகாரி: அவளின் பெயர் என்ன?

நபர்: ஏதோ ஒரு பூவின் பெயர் சேர்.

கா.அ: என்ன உயரம் இருப்பா?

நபர்: ஒருக்காலும் கவனிச்சதில்லை.

கா.அ: ஒல்லியா? குண்டா?

நபர்: ஒல்லி இல்லை. குண்டா இருக்கலாம்.

கா.அ: கண்களின் நிறம்?

நபர்: கவனிச்சதில்லை.

கா.அ: கூந்தலின் நிறம்?

நபர்: காலங்களுக்கேற்றவாறு மாறும்.

கா.அ: காணாமல் போகும் போது என்ன அணிந்திருந்தா?

நபர்: சேலை அல்லது சல்வார். வடிவா ஞாபகம் இல்ல.

கா.அ: காணாமல் போகும் போது யாராவது கூட இருந்தாங்களா?

நபர்: ஓம். என்ர செல்ல நாய். பெயர் றோமியோ. பொன்னிற சங்கிலியால கட்டப்பட்டிருக்கும். 30 அங்குல உயரம், அளவான உடலமைப்பு, நீல நிற கண்கள், கறுப்பு சேர்ந்த மண்ணிற உரோமம், றோமியோவின் இடது காலின் பெருவிரலின் நகம் சிறிது உடைந்துள்ளது, குரைப்பது குறைவு, ஓர் பொன்னிற கழுத்துப்பட்டி அணிந்திருந்தான், அவனுக்கு அசைவ உணவுகள் தான் பிடிக்கும், நானும் அவனும் ஒன்றாகத் தான் உணவு அருந்துவோம், ஒன்றாகத் தான் நடைப்பயிற்சிக்கு செல்வோம்... (இதைச் சொன்னவாறே அந்த நபர் அழத் தொடங்கினான்)

காவல்துறை அதிகாரி- நாங்கள் முதல்ல நாயைத் தேடுவம்.

****************************************************************
சிறிய நகைச்சுவைகள்...

ஆண்கள் பொதுவாக தங்களது மனைவியிடத்தில் 3 குண அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள்.
சமையலறையில் சிக்கனம் செய்பவளாகவும், ஓர் கலைஞனாக வீட்டிலும், படுக்கையறையில் பேயாகவும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் நடப்பதோ, சமையலறையில் கலைஞனாகவும், வீட்டில் பேயாகவும், படுக்கையறையில் சிக்கனம் செய்பவளாகவுமே கிடைக்கிறார்கள். (என்று சொல்கிறார்கள். அனுபவம் இல்லை. ஹி ஹி ஹி...)

ஆண்கள் பொதுவாக அழகான, புத்திசாலித்தனமான, நன்றாக சமைக்கக் கூடிய பெண்களை தங்கள் மனைவியாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உள்ள பிரச்சினை என்னவெனில் சட்டத்தின்படி ஓர் ஆண் ஓர் பெண்ணை மட்டும் தான் மணம் புரிய முடியும்.

பன்றிகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான முக்கியமான வித்தியாசம் என்ன?
பன்றிகள் குடித்த பின்னர் மனிதர்களாக மாறுவது இல்லை.

நல்ல வழக்கறிஞருக்கும், புத்திசாலி வழக்கறிஞருக்குமிடையிலான வித்தியாசம் என்ன?
நல்ல வழக்கறிஞருக்கு சட்டம் தெரியும், ஆனால் புத்திசாலி வழக்கறிஞருக்கு வழக்கின் தீர்ப்புத் தெரியும்.

நாய்கள் ஏன் மணம்முடிப்பதில்லை?
ஏனெனில் அவை ஏற்கனவே நாய்வாழ்க்கை வாழ்வதால்.

அம்மாவுக்கும், மனைவிக்குமிடையிலான ஒற்றுமை என்ன?
அம்மா எங்களை இந்த பூமிக்கு அழுதவாறு கொண்டுவருகிறாள். மனைவி நாங்கள் தொடர்ந்து அழுவதை உறுதி செய்கிறாள்.

ஓர் அழகு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'இங்கிருந்து வெளியே செல்லும் அழகான இளம் பெண்களைப் பார்த்து விசில் அடிக்க வேண்டாம். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்.'

ஓர் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'எங்கள் வியாபாரத்தை கொண்டோடுவதற்கு உங்கள் தலைகள் வேண்டும்'

வீதியில் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகை:
'உங்கள் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதை அடையும் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். அல்லாவிடில் அவர்கள் குறித்த வயதை அடையாமலேயே போய்விடுவார்கள்.'

***********************************************************************************************************

எந்நேரமும் மொக்கைப் பதிவுகள் போடுவதாக ஓர் உணர்வு...
நாளை ஏதாவது சிந்தனைப்பதிவுகள் (சீரியஸ் பதிவு என அழைப்பதைவிட சிந்தனைப்பதிவு என அழைப்தை விரும்புகிறேன்.) போட முயற்சிக்கிறேன்...