க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மறத்தமிழர்கள் ஏன் தீவிரவாதிகளாக மாறமுடியாது என்றும், மறத்தமிழர்களால் ஏன் ஒரு விமானத்தைக் கடத்த முடியாது என்றும் தெரியுமா?


(இது முற்றுமுழுதான நகைச்சுவைக்காக மட்டுமே. எந்தவித அரசியல், இன கேவலப்படுத்தலும் கிடையாது)


1. நாம் எப்போதுமே பிந்தித் தான் செயற்படுவோம். அதனால் கடத்த நினைத்த விமானத்தை அல்ல அதற்கு பிறகு சென்ற 10 விமானங்களையும் தவறவிட்டுவிடுவோம்.


2. எப்போதுமே நாம் சத்தமாகவே கதைப்போம். அதனால் விமானநிலையத்திலேயே நாம் கடத்தப்போகும் விடயம் தெரியவந்துவிடும்.


3. விமானத்தில் இருக்கும் இலவச உணவு, சிற்றுண்டிகளைப் பார்த்ததும் நாம் ஏன் விமானத்துக்குள் வந்தோம் என்பதை மறந்து இலவசங்களை ஒருபிடி பிடிப்போம்.


4. எமக்கு கையை நீட்டி, அசைத்து கதைத்தே பழக்கம். எனவே கையில் வைத்திருக்கும் ஆயுதங்களை கீழே தவறவிட்டுவிடுவோம்.


5. எங்களுக்கு விமானத்தில் பறப்பதென்றால் ஓர் ஆசை. விமானத்தில் ஏறியவுடனேயே நாம் விமானத்தை கடத்தும் திட்டத்தை கைவிட்டு அப்படீயே விமானத்தில் பறந்து எங்கேயாவது வெளிநாட்டுக்கு போய்விடுவோம்.


6. விமானத்துக்குள் விவாதங்கள் செய்து சண்டை ஒன்றை நமக்குள்ளேயே தொடங்கி நம்மை நாமே காட்டிக் கொடுப்போம்.


7. எங்களால் இரகசியங்களை காப்பாற்ற முடியாது.
விமானம் கடத்த 1 வாரத்திற்கு மன்னரே ஊரெல்லாம் அதை எப்படியாவத பரப்பி சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வோம்.


8. எங்கள் விமானக்கடத்தல் திட்டத்தை கிறிக்கெற் போட்டிகளைப் பார்க்கும் ஆவலால் தள்ளிப்போட்டுக் கொண்டெ செல்வோம்.


9. நாம் பணயக்கைதியாகப் பிடித்த ஒருவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள அடிபட்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வோம்.