உன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால் அவனைப் பழிவாங்க சரியான முறை உன் மனைவியை அவனோடு இருக்க விடுதல் தான்...
- டேவிட் பிஸனோற்
திருமணத்தி்ன் பின்னர் கணவனும் மனைவியும் ஓர் நாணயத்தின் இருபக்கமும் போல் ஆகிவிடுகிறார்கள். அவர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது. ஆனால் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள்.
- சச்சா குய்ற்ரி
திருமணம் என்பது எப்போதும் நல்லதே.
நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய்.
கூடாத மனைவி கிடைத்தால் தத்துவவியலாளனாக மாறிவிடுவாய்.
- சோக்றடீஸ்.
மிகப்பெரிய இலக்குகளை எமக்குக் காட்டி, நாம் அதை அடைய நினைக்கும் போது அதைத் தடுப்பவர்கள் தான் பெண்கள்.
- பெயரில்லா... (அனானி...)
என் வாழ்வில் நான் விடையளிக்க முடியாமல் போன மிகப்பெரிய கேள்வி...
'பெண்களுக்கு உண்மையில் என்ன வேண்டும்?'
-டுமஸ்.
நான் என் மனைவியிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசினேன்.
அவள் ஓரிரண்டு பந்திகள் பேசினாள்.
- சிங்மன்ட் பிரெட்
சிலர் எங்கள் நீண்ட திருமண வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள்.
நாங்கள் உணவுவிடுதிக்குச் செல்ல வாரத்தில் இரண்டு நாட்களை ஒதுக்குகிறோம்.
ஒரு சிறிய மெழுகுவர்த்தியில்.... ஓர் இரவு உணவு.... மென்மையான இசை... மற்றும் சிறிய நடனங்கள்...
மனைவி வியாழக்கிழமை செல்வாள்... நான் வெள்ளிக் கிழமை செல்வேன்...
- பெயரில்லா...
இலத்திரனியல் வங்கியியலை விட வேகமாக பணத்தை பரிமாற்றும் நடவடிக்கை ஒன்று இருக்கிறது...
அதை திருமணம் என்று அழைக்கிறார்கள்.
- ஷாம் கினிசன்.
என் இரண்டு மனைவிமாரோடும் எனக்கு துரதிஷ்ரம் தான்...
முதலாமவள் இறந்துவிட்டாள்... இரண்டாமவள் உயிரோடு இருக்கிறாள்...
- ஜேம்ஸ் ஹொல்ற் மக்கவ்ரா.
உங்கள் மனைவியின் பிறந்த தினத்தை வாழ்க்கை முழுவதும் மறக்காமல் இருக்க சிறந்த வழி, ஒரு முறை அவளின் பிறந்த தினத்தை மறத்தல் தான்...
- நாஷ்.
திருமணத்திற்கு முன்னர் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா...?
எனக்கு விரும்பிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன்.
- பெயரில்லா...
நானும் என் மனைவியும் இருபது வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
பின்பு இருவரும் சந்தித்துக் கொண்டு காதலில் விழுந்தோம்.
- ஹென்னி ஜங்மான்.
நல்ல மனைவி என்பவள் எப்போதும் தன் கணவனை மன்னிப்பாள், பிழை தன்பக்கம் இருக்கும் போது.
- றொட்னி டேன்ஜர்பீல்ட்.
(அவ்வப்போது சேர்த்து வைத்திருந்தவை. திடீரென்று பார்த்தால் ஒரு பதிவு போடுமளவிற்கு சேர்ந்திருந்தன.
அதனால் மனைவிமாரைப் பற்றி ஒரு பதிவு. எதுவுமே என் சொந்தக் கருத்து இல்லை. ;)
ஏற்கனவே மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிக் கதைத்தாலும் நான் சின்னப் பையன் என்பதால் பிரச்சினைகள் வராது என்று பதிவுலக சோதிட சிங்கம் வந்தியண்ணா தனது சோதிடப் பதிவில் சொல்லியிருப்பதால் தைரியமாக பதிவிடுகிறேன்.)
**********************************************************************************************************
முதலாமவன் : என் மனைவி தேவதை... என் மனைவி தேவதை...
இரண்டாமவன்: நீ அதிர்ஷ்ரக் காரன்... என் மனைவி இப்போதும் உயிரோடு தான் இருக்கிறாள்.
மனைவி: என்னங்க... எங்கட மகள் யாரையோ காதலிக்கிறாள் எண்டு நினைக்கிறன்.
கணவன்: எப்பிடி உறுதியா சொல்றாய்?
மனைவி: அவள் இப்ப என்னட்ட எதுக்குமே காசு கேக்கிறதில்ல...
நட்பு என்றால் இது தான்...
ஒரு நபர் இன்னொருவரிடம் கூறுகிறார்.
'எனது மனைவி எனது நண்பனொருவனுடன் ஓடிவிட்டாள். நான் எனது நண்பனை இழந்து தவிக்கிறேன்.