என்னைப் பற்றி
மூஞ்சிப் புத்தகம்
நல்லவர் பட்டாளம்....
மொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...
தமிழ்
கிறிக்கெற் என்பது நம்மவர்களுக்கெல்லாம் தேசிய விளையாட்டாக மாறிப் போனாலும் கிறிக்கெற் பற்றி பதிவிட்டால் அதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுப்பவனா நான்?
யார் என்ன சொன்னாலும் விடமாட்டேன் என்று தொடர்ந்து நகைச்சுவைப் பதிவுகளைத் தானே எழுதுகிறேன். என்னால முடிஞ்சத தானே எழுத முடியும்?
சரி... விடயத்துக்கு வருவோம்...
திறமை இருந்தும் சர்வதேச ரீதியில் பிரகாசிக்காத அல்லது பிரகாசிக்க முடியாமல் போன வீரர்களைப் பற்றி ஓர் பதிவிட வேண்டும் என்று நிறைய நாளாக ஆசை இருந்தது.
இதோ...
பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...
இலங்கையில் இருந்து ஆரம்பிப்போம்... (ஓரளவு தற்போதைய கால வீரர்களைத் தான் கணக்கிலெடுக்கிறேன்)
1. சாமர கப்புகெதர
வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்நுட்டபத் திறன் (technic) காரணமாக சிறுவயதிலேயே இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மண்ணில் பிரெட் லீயின் பந்தை துவம்சம் செய்து இவர் ஆடிய விதத்தைப் பார்த்து இவரை இலங்கையின் எதிர்காலம் என எண்ணியவர்கள் பலர். எனினும் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை.
இவருக்கு ரெக்னிக் எனப்படும் ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவர் technically sound என பலர் அழைக்கிறார்கள். எனினும் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்தும் சறுக்கி வருகிறார்.
எனினும் இன்னும் சிறுவயது என்பதால் மீண்டு வருவார் என நம்புவோம்.
2. இந்திக்க டீ சரம்
வலதுகைத் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான இவர் இலங்கை அணியில் இடம்பெறும் நோக்கில் சிறிது காலத்திற்கு முன்னர் விக்கெட் காப்புப் பணியை விட்டுவிட்டடு தனியே துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடித்தாடும் வீரரான இவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்.
எனினும் அரசியல் காரணங்களாலோ என்னவோ தொடர்நதம் அணியில் இடம் வழங்க மறுக்கப்படுகிறார்.
இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் இலங்கையில் நடந்த இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் பதினொருவரில் இடம்பெற்றிருந்த போதிலும் டில்ஷானால் கடை மத்தியநிலை (ஆறாம் இடத்தில் என்று நினைக்கிறேன்) வீரராக மாற்றப்பட்டு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்காமல் வெறும் களத்தடுப்பாளராக விளையாடினார்.
இம்முறை இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தில் பதினொருவரி்ல் இடம் கிடைக்கவில்லை. சாமர சில்வா தொடர்ந்து பிரகாசிக்காமல் விட்ட போதிலும் இவரை விளையாட அனுமதிக்கவில்லை.
இவரது தந்தை ஓர் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பதால் தான் இந்த நிலை என அறிய முடிந்தது.
இப்போது 36 வயதாவதால் இவரை இனி அணியில் சேர்ப்பார்களா தெரியவில்லை.
3. மாலிங்க பண்டார
கிறிக்கெற் விளையாடுவதில் இரண்டாவது மிகக்கடினமான அம்சம் எனக்கருதப்படும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான இவர் பல காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. (முதலாவது கடின அம்சமாக விக்கெட் காப்புப்பணி கருதப்படுகிறது)
அதிகளவான வித்தியாசமான பந்துவீச்சு வகைகள் (variation) இல்லாததால் முன்னரே ஓரளவு கணிக்கப்படக் கூடியவராக (predictable) மாறியதும் ஓர் காரணம். (Wrist spinner's some variations - google, flipper, zooter)
அத்தோடு பந்தை அதிகளவு திருப்பும் தன்மையும் இவரிடம் இல்லை.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிறிக்கெற் என்பது துடுப்பாட்ட வீரர்களது விளையாட்டாகிவிட்டதால் ஓட்டங்களை மட்டுப் படுத்துவதே சுழற்பந்து வீச்சாளர்களது பிரதான பணியெனக் கருதப்படும் நிலையில் இவர் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளுக்கு சிறந்தவர் என்ற போதிலும் முரளி, மென்டிஸ், ஹேரத் ஆகியோர் இவரை விட முன்னிலையில் நிற்பதால் வாய்ப்புக் கிடைக்காது தவித்து வருகிறார்.
இனி இந்தியா
1. ஸ்ரீசாந்
சிலர் நான் நகைச்சுவை செய்கிறேன் எனக் கருதலாம்.
ஆனால் உண்மையில் ஸ்ரீசாந் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்.
Seam position எனப்படும் பந்தின் நூல்ப்பகுதியின் அமைவு என்பது வேகப்பந்து வீச்சாளருக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. கவனித்தப் பார்த்தீர்களானால் இவரது Seam அமைவு சிறப்பாக அமையும். (அதாவது பந்து ஆடுகளத்தை அடிக்கும் போது ஓரளவுக்கு நேராக அடிக்கும். அதிகளவுக்கு சுழராது. Scramble seam எனப்படும் ஓர் வகை இருந்தாலும் இது ஒரு வகை variation ஆகவே கருதப்படுகிறது.)
எனினும் இவரது திரும்பும் பந்துகள் (Swing) துடுப்பாட்ட வீரருக்கு நன்றாக திரும்புவதால் இவரது திரும்பலை அடையாளம் காணமுடிவதாக அலன் டொனால்ட் அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிய மாற்றமொன்றை செய்தால் இதை நிவர்த்திக்க முடியும். (வேகப்பந்து வீச்சின் இரகசியமாக கருதப்படுவது பந்து பிந்தி திரும்புதல், அதாவது late swing)
ஆனால் இதைவிட இவரது தனிப்பட்ட நடத்தைகள் தான் இவரை அதிகளிவில் பாதித்தன.
எளிதாக உணர்ச்சி வசப்படும் இவரது குணத்தால் தன் கட்டுப்பாட்டை மீறுவதால் இவரது பந்துவீச்சு பாதிக்கப்பட்டுள்ளது.
(அன்ட்ரூ நெல்லின் பந்தை நான்கு ஓட்டங்களுக்கு அடித்து விட்டு ஆடுகளத்தில் துடுப்பைச் சுற்றிச் சுற்றி இவர் ஆடிய ஆட்டம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.)
2. முனாப் பட்டேல்
தனிப்பட்ட ரீதியில் எனக்கு முனாப் பட்டேலை மிகப் பிடிக்கும்.
கவனித்துப் பார்த்தீர்களால் இவரது பந்துவீச்சுப் பாணியும் கிளெய்ன் மக்ராத்தின் பந்துவீச்சுப் பாணியும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கும்.
அருமையான line and length இல் பந்து வீசக் கூடிய திறமையுள்ளவரான இவர் விக்கெட் எடுப்பதற்கு தேவையான திரும்பல் திறனையும் கொண்டவர்.
முதலாவது மாற்ற பந்துவீச்சாளராக (first change bowler) பந்துவீசுவது என்பதொன்றும் இலகுவான விடயமல்ல.
பந்து ஆரம்ப நிலையைப் போல பெரிதாகக் திரும்பாது. (less swing)
பெரிதான Seam movement உம் இருக்காது.
ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றாவிட்டால் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது என்றும், ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினால் ஓட்டங்களை கட்டுப்படுத்துவது என்றும் இவர்களது வேலை மாறிக் கொண்டேயிருக்கும்.
முதலாவது பந்துவீச்சாளர்களாக இருந்து ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக மாறிய பின்ரே உமர் குல், மிற்செல் ஜோன்சன் ஆகியோர் நிறைய இலக்குகளை கைப்பற்றத் தொடங்கினர்.
இந்தியாவின் சிறந்த முதலாம் மாற்றப் பந்துவீச்சாளர் என ஜவகல் ஸ்ரீநாத் இனால் புகழப்பட்டவர்.
எனினும் காயங்களால் நிறையவே பாதிக்கப்பட்டவர். காயத்தால் பந்துவீச்சு வேகமும் சற்றுக் குறைந்தது.
இப்போது தான் அணியில் மீண்டும் இடம்பெற ஆரம்பித்திருக்கிறார். பார்ப்போம்....
3. ரோகித் சர்மா
முதலாவது ஐ.பி.எல் இன் பின்னர் அடுத்த ரெண்டுல்கர் எனக் கருதப்பட்டவர்.
எனினும் இவர் இருபதுக்கு 20 போட்டிகளையே பெரிதும் விரும்புகிறார்.
ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை.
இவரொன்றும் இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரர் (hard hitting batsman) அல்ல.
இவரைப் போன்ற ஆட்டமுறையைக் கொண்டவர்களை classy batsman என அழைப்பர். (மகேல, ரெண்டுல்கர், மார்க் வோ, ட்ராவிட், சமரவீர, பொன்ரிங் போன்ற பிரபலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.)
இவரிடம் நல்ல technic இருந்த பொதிலும் இருபதுக்கு 20 போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் போனதற்கு இவரின் மனப்பாங்கை (temperament) ஐ இவர் சரியாக கட்டுப்படுத்தாமை தான் காரணம் என கருதப்படுகிறது.
4. ரொபின் உத்தப்பா
தனது முதல் போட்டியில் இங்கிலாந்துக்கெதிராக 86 ஓட்டங்களை எடுத்து இந்திய துடுப்பாட்ட வீரரொருவர் தனது முதல் போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் எடுத்த அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.
அத்தோடு இந்திய அணி சார்பாக சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அரைச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருக்கிறார்.
ஓரளவு வழமையான அடிகள் மூலம் (orthodox shots) மூலம் ஓட்டங்களைக் குவிக்கும் திறனுள்ள இவருக்கும் temperament பிரச்சினை இருப்பதால் இதுவரை சர்வதேச ரீதியில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இன்னும் வயது இருப்பதாலும், 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் பின்னர் பல சிரேஷ்ர வீரர்கள் ஓய்வுபெறுவார்கள் என்பதாலும் சாதிக்க வாய்ப்புண்டு.
அப்படியே கிறிக்கெற் பற்றி பெரிதாக தெரியாதவர்களுக்காக,
temperament என நான் குறிப்பிட்டது, ஒரு துடுப்பாட்ட வீரர் துடுப்பாட்ட வீரர் ஒருபுறத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது விக்கெட்டுக்கள் மறுபுறத்தில் சரிந்தாலோ அல்லது பந்துவீச்சாளர் அருமையாக பந்து வீசினாலோ அல்லது பந்து வீச்சாளர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது கொஞ்சப் பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்கள் பெற முடியாமல் போனாலோ உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது ஆகும்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கும், தொடர்ந்து பந்துகள் எல்லைக் கோடுகளுக்கு அடிக்கப்பட்டாலோ அல்லது துடுப்பாட்ட வீரர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது பிடிகள் தவறவிடப்பட்டாலோ எரிச்சலடையாமல் பொறுமையைக் காத்து தொடர்ந்து சரியாக பந்து வீசுதல்.
(பகுதி இரண்டில் பாகிஸ்தான் வீரர்களும், ஏனைய வீரர்களும்.)
ஊடகங்களில் வெளியான அறிக்கைகளுக்கு புறம்பாக யுனிஸ்கானின் பதவி விலகலுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.
பதவி விலகலுக்கு காரணமான வெவ்வேறு வகைகள்...
தாஸ்ரியின் வேர்ஷன் (Dasti's Version): பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினரான தாஸ்ரி (அல்லது தஸ்ரி) இந்த மாதம் ஒக்ரோபர் என்பதை மறந்து ஏப்ரல் மாதம் எனவும் அவர் அறிக்கை வெளியிட்ட நாள் ஏப்ரல் முதலாம் திகதி எனவும் நினைத்துவிட்டார்.
அதனால் தான் ஆட்ட நிர்ணயசதி மற்றும் வேண்டுமென்றே தோற்றமை குறித்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
அரையிறுதியில் பாகிஸ்தானின் தோல்வியால் கவலையடைந்திருந்த பாகிஸ்தான் மக்களை ஏப்ரல் முட்டாள் நகைச்சுவை சொல்லி அவர்களைத் தேற்ற வந்த அவரின் நல்ல மனதை புரிந்து கொள்ளவில்லை.
அவர் அந்தத் திகதியை ஏப்ரல் முதலாம் திகதி என நினைக்க காரணம் இருக்கிறது.
ஏனென்றால் இஜாஸ் பட் இன் பிறந்த தினம் ஒக்ரோபர் மாதத்திலேயே வருவதால் இரண்டையும் முடிச்சுப் போட்டு முட்டாள் தினம் என்பதால் ஏப்ரல் முதலாம் திகதி என நினைத்துவிட்டார்.
யனிஸ் கான் வேர்ஷன்: யுனிஸ்கான் நினைத்தார் இந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களில் எதுவும் இல்லை என்று. ஏனென்றால் ஆட்டங்கள் யாவும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு இருப்பவை தானே. போதிய ஏற்பாடுகளை செய்வதற்காக முன்னரே ஆட்டங்களின் திகதிகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம் தானே. இதில் என்ன இருக்கிறது என விட்டுவிட்டார்.
அதே வேளை தனது திருமண நிறைவுநாள் வருவதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இரண்டுநாள் விடுமுறை கேட்டு விடுமுறைக் கோரிக்கை கடிதத்தை (leave letter) இஜாஸ் பட் இடம் கையளித்தார்.
அந்தக் கடிதத்தை ஊடகங்கள் தான் இராஜினாமாக் கடிதம் என வதந்தியாக மாற்றிவிட்டன.
இஜாஸ் பட் உம் ஷகிட் அப்ரிடியை அணித்தலைவராக்க விரும்பியதால் இராஜினாமாக் கடிதம் எனக் கதையை மாற்றிவிட்டார்.
இதற்கெதிராக தனது கையை உயர்த்த யுனிஸ் கான் விரும்பினாலும் அவரது விரலில் முறிவு இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
திரு.இஜாஸ் பட் இன் வேர்ஷன் : Mr.Butt இன் பெற்றோர்கள் இதைவிட சிறந்த பெயரை அவருக்கு வைத்திருக்க முடியாது. (ஆங்கிலத்தில் எழுதியமையை கவனிக்க.) ஏனென்றால் அணியை மீள கட்டமைக்கும் காலப்பகுதியில் அணி பெற்றுத் தந்த அற்புதமான வெற்றிகளையும், முடிவுகளையும் சிதைத்த இவருக்கு இதைவிட சிறந்த பெயர் வேண்டுமா.
எல்லாவற்றுக்கும் இந்தியாவை நோக்கி விரலைக் காட்டுவதை விட்டுவிட்டு தனது வேலையை தான் ஒழுங்காக செய்திருந்தால் இவையெதுவும் நடந்திருக்காது. அணித்தலைவர் இல்லாமல் அணியைப் பற்றியும், அணியின் பெறுபேறுகளையும் பற்றி அணி வீரர்களோடு அதுவும் முட்டாள், பக்கச்சார்பான ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க இவர் எடுத்த முயற்சிகள் வாசிப்பதற்கும், கேட்பதற்கும் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் தருகின்றன.
பாகிஸ்தான் இரசிகர்களது வேர்ஷன்: அதிகாரிகளாலும், ஊடகங்களாலும் செய்திகள் பரப்பப்பட்டு இவை நடப்பவை எமக்கொன்றும் புதிதில்லை. இதில் நல்ல விடயம் என்னவென்றால் இந்தக் கொடுமைகள் ஏற்கனவே பலமுறை நடந்திருப்பதாலும் அணிவீரர்கள் இதற்கு பழகிவிட்டார்கள் என்பதும் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் அணியானது மைதானத்தில் சிறப்பாக ஆடும் என்பதும் (குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக) அனைவரும் அறிந்ததே. அணி நிர்வாகத்தை நடத்த இம்ரான் கானை மறுபடியும் கொண்டுவாருங்கள்...
இங்கிலாந்து இரசிகர்களது வேர்ஷன்: கடவுளே! கெவின் பீற்றர்னை கடுப்பாக்குவதற்கு அவரின் முன்னால் வேறு ஒருவரை புகழ்வதற்கு எமக்கு யாருமே இல்லை. அதனால் தான் மைக் ஆதர்ற்றனை உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என வர்ணித்தோம்.
பாகிஸ்தானில் ஏராளமான திறமைகள் இருக்கின்றன, அத்தோடு சர்ச்சைகளும் இருக்கின்றன.
பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரிரண்டு வீரர்களை கொத்திக் கொண்டு போய் எமது இங்கிலாந்து நாட்டு வீரர்களுக்கு பதிலாக விளையாடினால் இங்கிலாந்து நாட்டைச் சேராத இங்கிலாந்து அணியொன்றை கட்டியெழுப்பும் எங்கள் கனவு மெய்ப்படும்.
குறிப்பு: இது என்னுடைய சொந்த ஆக்கமல்ல. ஆங்கிலத்தில் நண்பரொருவர் எழுதிய ஆக்கத்தில் தமிழ் வடிவமே இது.
தன்னுடைய ஆக்கத்தை மொழிமாற்றம் செய்து என்னுடைய தளத்தில் வெளியிட அனுமதி தந்த இந்தியாவைச் சேர்ந்த நண்பர் ரமேஷ் இற்கு நன்றிகள் பல.
****************************************************************************
அப்படியே.... இன்று தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவுருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
பிரெட் ட்ரூமான் பந்து வீசிக் கொண்டிருந்தார். பந்து துடுப்பாட்ட வீரரின் துடுப்பின் ஓரத்தில் பட்டு முதலாவது சிலிப் இற்கு சென்றது. ஆனால் முதலாவது சிலிப் இல் நின்ற ரமன் சுப்பா றோ இனால் அதைப் பிடிக்க முடியவில்லை. பந்து அவரின் இரண்டு கால்களுக்குமிடையில் சென்றது. பிரெட் எதுவும் கூறவில்லை. பந்துப் பரிமாற்றம் நிறைவடைந்த பின்னர் றோ பந்துவீச்சாளரிடம் சென்று மன்னிப்பு கேட்கும் விதமாக கதைத்தார். 'நான் இரண்டு கால்களை சேர்த்து ஒட்ட வைத்திருந்திருக்க வேண்டும்' என்றார். பிரெட் சொன்னார் 'மகனே அது நீ அல்ல. உனது அம்மா தான் அதைச் செய்திருக்க வேண்டும்'.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ரெஸ்ற் போட்டியொன்றில் மேர்வ் ஹியூஸ் (அவுஸ்ரேலியா) தென்னாபிரிக்காவின் ஹான்சி குரேஞ்சே இற்கு பந்து வீசிக் கொண்டிருந்தார். தட்டையான அந்த ஆடுகளம் பந்துவீச்சாளருக்கு எந்தவிதத்திலும் நன்மை அளிக்கவில்லை. ஹியூஸ் வீசிய பந்துகளை அரங்கம் முழுவதும் பறக்கச் செய்தார் குரோஞ்சே. ஹியூஸ் வீசிய ஒவ்வொரு பந்துகளும் எல்லைக் கோட்டிற்கு சென்றன. எரிச்சலடைந்த ஹியூஸ் குரேஞ்சேயிடம் சென்று 'அஜீரண வாயுவை' (fart) வெளியேற்றி விட்டு 'உன்னால் முடியுமென்றால் இதை அடித்துப் பார்' என்றார். முழு மைதானத்திலும் மயான அமைதி நிலவியது.
ஹர்பஜன் சிங் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கு வந்தார். இலக்குக் காப்புப் பணியில் நின்ற சங்கக்கார ஹர்பஜனிடம் 'துடுப்பெடுத்தாட வரும் போது அரைக் கை கொண்ட மேலாடையும், பந்து வீசும் போது முக்கால் கை கொண்ட மேலாடையும் அணிவதற்கு காரணம் என்ன?' என்று கேட்டார். விளைவு- அடுத்த சில நிமிடங்களில் ஹர்பஜன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
(ஹர்பஜன் சிங் பந்தை எறிவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த காலமது. பந்தை வினைத்திறனாக, மற்றவர்களுக்கு தெரியாமல் எறிவதற்காகவே முக்கால் கை கொண்ட ஆடைகளை அணிகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்த காலமது.)
ஆஷஷ் தொடரொன்றில் ரொட் மார்ஷ் மற்றும் இயன் பொத்தம் ஆகியோருக்கிடையில் நடைபெற்றதே இது.
இயன் பொத்தம் துடுப்பெடுத்தாட வந்தார். துடுப்பெடுத்தாட வந்த பொத்தம் ஐ 'அன்பு' வார்த்தைகளில் வரவேற்றார் மார்ஷ் 'உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா?'. விடுவாரா பொத்தம்? பதிலளித்தார் அழகாக. 'மனைவி நலம். ஆனால் குழந்தைகள் மூளை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்றார்.
அர்யுன ரணதுங்க துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். ஷேண் வோண் பந்து வீசிக் கொண்டிருந்தார். ரணதுங்கவை ஆட்டமிழக்க வைக்க முடியாததால் புதிய வகை உத்தியொன்றை கையாண்டார் வோண். பந்தை நன்றாக உயரவிட்டு (பிளைற்றிங்) துடுப்பிலிருந்து சற்று முன்னே விழச் செய்தார். எனவே ரணதுங்க காலை முன்னோக்கி இழுக்கவோ அல்லது இரண்டு அடிகள் முன்னே வைத்து அடிக்க முயல்வார், அதன் மூலம் ஸ்ரம்ப் செய்யலாம் என நம்பினார். ஆனால் ரணதுங்க அசைவதாக இல்லை.
எரிச்சலடைந்த இலக்கக் காப்பாளர் இயன் ஹீலி கத்தினார் 'இதற்குப் பதில் 'மாஷ் சொக்ளெற்' ஒன்றை அங்கே போடு. நீ விரும்புவதை அது செய்யும்' என்றார்.
பிரெட் ட்ரூமானிற்கும் ஓர் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரருக்கும் இடையில் 1960களில் நடைபெற்றது இது.
அவுஸ்ரேலிய இங்கிலாந்து ரெஸ்ற் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து மைதானத்திற்குள் வரும் கதவிற்கு அருகில் நின்று பந்து தடுப்புப் பணியில் நின்று கொண்டிருந்தார் ட்ரூமான். ஒரு வீரர் ஆட்டமிழக்க மற்ற வீரர் மைதானத்திற்குள் வந்த பின் அந்தக் கதவை மூட முயன்றார். ட்ரூமான் சொன்னார், 'கஷ்ரப் படாதே மகனே. பூட்டாமல் செல். நீ அங்கே அதிகமாக நிற்கப் போவதில்லை.'.
அவுஸ்ரேலிய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நீல் மக்கென்ஸி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். நீல் மக்கென்ஸி மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போனவர். துடுப்பெடுத்தாடும் போடு 'கிறீஸ்' கோட்டை மிதிக்க மாட்டார், எதிரே உள்ள மற்ற துடுப்பாட்ட வீரரை பார்க்க மாட்டார் போன்றன.
பிரெட் லீ பந்து வீசிக் கொண்டிருந்த போது வந்து சொன்னார், 'ஏய் மக்கா! நீ கிறீஸ் கோட்டை மிதித்து விட்டாய். அது உனக்கு துரதிஷ்டத்தை அளிக்கப் போகிறது.'. விளைவு- 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் மக்கென்ஸி.
1999ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஸ்ரிவ் வோ இன் பிடியொன்றைத் தவறவிட்டார் ஹேர்ச்சில் கிப்ஸ். அந்தப் பந்துப் பரிமாற்றம் நிறைவு பெற்ற பின்னர் ஆடுகளத்தைக் கடந்து சென்ற கிப்ஸ் இடம் கேட்டார் வோ, 'ஹேய் ஹேர்ச்சில்! உலகக்கிண்ணத்தை தவறவிட்டதை எவ்வாறு உணர்கிறாய்?'
அர்யுன ரணதுங்கவிடம் கேட்டார் இயன் ஹீலி, 'உனது கால்கள் நடுங்குகின்றன போலிருக்கிறதே?'. ரணதுங்க சொன்னார் 'ஆம். உனது மனைவியுடன் உறங்கியதால் கால்கள் நடுங்குகின்றன.'
ஜேமி சிடன்ஸ், அவுஸ்ரேலியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் விளையாடியதே இல்லை.
ஒரு முறை சிடன்ஸ் சிலிப்ஸ் இல் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ஒரு துடுப்பாட்ட வீரர் மிகமெதுவாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். உடனே சிடன்ஸ் 'ஹேய்! இதொன்றும் ரெஸ்ற் போட்டி இல்லை' என்றார்.
துடுப்பாட்ட வீரர் திரும்பி 'நிச்சயமாக! ஏனென்றால் நீ விளையாடுகிறாயே...' என்றார்.
சுனில் கவாஸ்கர் தனது வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட ஸ்தானத்தை அந்த ரெஸ்ற் போட்டிக்காக விட்டுக் கொடுத்து 4ம் இடத்தில் வர முடிவு செய்திருந்தார். ஆனால் மேற்கிந்திய ஆரம்பப் பந்து வீச்சாளரான மல்கம் மாஷல் தனது பந்து வீச்சால் அனுஸ்மான் கேய்க்வேட் மற்றும் துலிப் வெங்சாக்கர் ஆகியோரை பூச்சியத்துக்கே அரங்கு திருப்பினார். விளைவு சுனில் கவாஸ்கர் அரங்கு புகும் போது பூச்சியம் ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. கவாஸ்கரை மேலும் பதற்றப்படுத்த விவியன் றிச்சட்ஸ் சொன்னார் 'மனிதா! நீ ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வந்தாலென்ன 4ம் இலக்கத்தில் வந்தாலென்ன வேறுபாடில்லை. ஓட்ட எண்ணிக்கை பூச்சியம் தான்'
அவுஸ்ரேலியாவின் கிளெய்ன் மக்ராத் பந்து வீசிக் கொண்டிருந்த போது மேற்கிந்தியத் தீவுகளின் ராம் நரேஷ் சர்வானிடம் 'லாராவின் அது (மக்ராத் கேட்ட வார்த்தையை தணிக்கை செய்திருக்கிறேன்) எவ்வாறு சுவைக்கும்?' என்றாராம்.
உடனே சர்வான் 'எனக்குத் தெரியாது. அதைப் போய் உன் மனைவியிடம் கேள்' என்றாராம்.
மக்ராத் கோபமுற்று 'நீ என் மனைவியை இனி அவமானப் படுத்தினால் உனது தொண்டையை வெளியே எடுத்து விடுவேன்' என்றார்.
டெரய்ல் குலைமான் என்பவர் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கு வந்தார். உடனே ஷேன் வோண் அருகில் போய் 'உன்னை அவமானப்படுத்த 2 வருடங்களாக காத்திருந்தேன்' என்றார்.
உடனே குலைமான் 'அந்த 2 வருடங்களையும் சாப்பிடுவதிலேயே செலவழித்திருக்கிறாய் போலிருக்கிறதே' என்றார்.
பரோர் என்பவர் துடுப்பெடுத்தாட ஆடுகளம் வந்தார். முதலாவது பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து அவர் துடுப்பில் படவில்லை.
இரண்டாவது சிலிப் இல் நின்ற மார்க் வோ 'ஓ! எனக்கு ஞாபகம் இருக்கிறது. சில ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் நீ எதற்கும் உபயோகமற்றவனாக இருந்தாய். இப்போது அதைவிட மோசம்' என்றார்.
உடனே பரோர் திரும்பி 'ஆம். அது நான் தான். அத்தோடு நான் அங்கே இருந்தபோது முதிய, அழுக்கான, வடிவில்லாத நடத்தை கெட்ட பெண்ணோடு திரிந்தாய். இப்போது அவளையே நீ திருமணம் புரிந்து விட்டாயாமே' என்றார் அமைதியாக.
கிளெய்ன் மக்ராத் சிம்பாப்வேயின் கடைசி துடுப்பாட்ட வீரருக்கு பந்து வீசிக் கொண்டிருந்தார். ஆனால் பிரென்ட்ஸால் பந்துக்கு கிட்டவே துடுப்பை கொண்டு போக முடியவில்லை.
எரிச்சலடைந்த மக்ராத் 'ஏன் நீ இவ்வளவு பருத்த உடலுடையவனாக இருக்கிறாய்' என்றார்.
உடனே பிரென்ஸ் 'ஏனென்றால் ஒவ்வொரு முறையும் உன் மனைவியோடு நான் காதல் புரியும் பொழுதும் உன் மனைவி எனக்கு பிஸ்கற்றுக்களை கொடுப்பது வழக்கம். அதனால் தான்' என்றார்.
அவுஸ்ரேலியாவின் மெர்வ் ஹியூஸ் ஐ அடிலெய்ட் இல் நடந்த ஒரு போட்டியின் போது பாகிஸ்தானின் ஜாவிட் மியான்டாட் இருவரும் மோதிக் கொண்ட போது 'பருத்த பேருந்து நடத்துனர்' என அழைத்தாராம்.
சிறிது நேரத்தில் ஜாவிட் மியான்டாட் இன் விக்கெற்றை ஹியூஸ் கைப்பற்றினார். ஜாவிட் மியான்டாட் வெளியேறும் போது ஹியூஸ் சத்தமிட்டார் 'Ticket please'.
ஸ்ரிவ் வோ தனது இறுதிப் போட்டியில் விளையாட ஆடுகளம் வந்தார்.
இலக்குக் காப்பாளரான இந்தியாவின் பார்த்திவ் பட்டேல் 'ஆகவே இது உங்களின் இறுதிப் போட்டி. எங்கே உங்கள் பிரபலமான வார்த்தைச் சண்டைகளை வெளியிடுங்கள் பார்க்கலாம்' என்றார்.
ஸ்ரிவ் வோ அமைதியாக 'எனக்கு மரியாதை செய். நான் எனது முதல் போட்டியில் விளையாடும் போது நீ நப்கின்னோடு தான் இருந்திருப்பாய்' என்றாராம்.
மேற்கிந்தியத் தீவுகளின் கிரெக் தோமஸ் தனது சக வீரரான விவியன் றிச்சட்ஸ் ற்கு உள்ளூர் போட்டியொன்றில் பந்து வீசிக் கொண்டிருந்தார்.
ஓர் அருமையான விலகிச் செல்லும் பந்தொன்று விவியன் றிச்சட்ஸை ஏமாற்றிச் சென்றது.
உடனே தோமஸ் அருகே சென்று 'அது (பந்து) சிவப்பு நிறமானது, கோளமானது, 5.5 அவுன்ஸ் அளவில் பாராமானது' என நக்கல் தொனியில் சொன்னார்.
அதற்கடுத்த பந்தை அரங்கத்திற்கு வெளியே அடித்தார் றிச்சட்ஸ்.
அமைதியாக சொன்னார் ' அது (பந்து) எப்படி இருக்கும் என உனக்குத் தான் தெரியுமே. போ! போய்த் தேடு' என்றார்.